LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- உலக நாடுகளில் தமிழர்கள்

இயற்கை வேளாண்மையில் சாதனை படைத்த அந்தமான் தமிழ் மூதாட்டிக்குப் பத்ம விருது

குடியரசு தினத்தையொட்டி நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவைச் சேர்ந்த இயற்கை விவசாயி காமாட்சி செல்லம்மாளும்(69)ஒருவர்.

 

தமிழரான இவர் தென்னை மற்றும் பனை மரங்களைச் சேதப்படுத்தாமல் பாதுகாக்கும் முறைகளை உருவாக்கியுள்ளார். இவர் தெற்கு அந்தமானில் உள்ள ரங்கசாங்கில் 10 ஏக்கரில் இயற்கை விவசாயப் பண்ணையை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளார். அதில், கிராம்பு, இஞ்சி, அன்னாசி மற்றும் வாழை உள்ளிட்ட ஊடு பயிர்களையும் பயிரிட்டுள்ளார்.

 

இயற்கையான விவசாய முறையைப் பயன்படுத்திப் பயிர் செய்து வருகிறார். தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை அவர் பயன்படுத்துவதில்லை.இது போன்று இயற்கை விவசாயம் செய்யும்படி மற்ற விவசாயிகளையும் காமாட்சி செல்லம்மாள் ஊக்கப்படுத்தியுள்ளார். அவரது வலியுறுத்தலால், 150-க்கும் மேற்பட்டோர் வழக்கமான விவசாய முறைகளை விட்டு விட்டு இயற்கை விவசாயத்துக்கு மாறி உள்ளனர்.

 

வருடத்துக்கு 27 ஆயிரம் தேங்காய் சாகுபடி

 

விவசாயத்தில் புதுமையான அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறார். தென்னை சாகுபடியை எளிதாக்கி, குறைவான செலவிலான பயிர் முறைகளை உருவாக்கியுள்ளார்.தென்னை மரங்களுக்குத் தீங்கு ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகள் உட்பட விவசாயத்திற்கான ஆக்கப்பூர்வமான, செலவு குறைந்த தீர்வுகளைச் செயல்படுத்தியுள்ளார்.

 

அவருடைய தென்னை தோட்டத்தில் வருடத்துக்கு 27 ஆயிரம் தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள செல்லம்மாளுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

by Kumar   on 29 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.