|
|||||
மொரீஷியஸில் 16-வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு |
|||||
மொரீஷியஸ் நாட்டில், மொரீஷியஸ் பல்கலைக்கழகத்தில் 16-வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு கோலாகலமாக நடைபெற்றது. மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபர் பார்லேன் வையாபூரி பண்பாட்டு மாநாட்டை தொடக்கி வைத்தார்.
***********************************
இம்மாநாட்டில் மலேசிய பிரதிநிதித்துவ கெமிலாங் கூட்டுறவு கழக தலைமை நிர்வாகி கஜேந்திரன் சிதம்பரம், நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளி உருமாற்ற இயக்கத் தலைவர் டத்தோ டாக்டர் கனகராஜா ராமன் ஆகியோரின் தலைமையிலான 46 பேர் அடங்கிய குழுவினர் இதில் பங்கேற்றனர் .
************************************
மாநாட்டின் தொடக்க விழாவின்போது உலக பண்பாட்டு இயக்கத்தில் நீண்டகாலம் சேவையாற்றி வந்த மலேசிய நாட்டு பிரதிநிதித்துவ அமைப்பின் உதவித் தலைவரும் பிரபல அரசியல்வாதியும் சமூகநலவாதியும் எழுத்தாளருமான முனைவர் தி.இராமநாயகத்திற்கு பண்பாட்டுச் சேவை தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விருதை பெற்ற ஒரே பிரமுகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
**************************************
மலேசியாவைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியும், உலக தமிழர் பண்பாட்டு இயக்க பொறுப்பாளர்களில் ஒருவருமான முன்னாள் தெலுக் கெமாங் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் கிருஷ்ணன் லட்சுமணனுக்கு வைரத் தமிழர் விருது வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து கெமிலாங் கூட்டுறவு கழகத் தலைமை நிர்வாகி கஜேந்திரன் சிதம்பரம், ஆசிரியர் மேனகா நாராயணசாமி, வெ.விஜயா ஜனார்த்தனன் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.
**************************************
மேலும், உலகத் தமிழ்மாமணி விருது பெறும் 24 பிரமுகர்களில், ந.வி.பொன்னி வீரப்பன், மாநாட்டின் இணைச் செயலாளர் த.கணேசன் ஆகிய இருவரும் மலேசிய நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
***********************************
முன்னதாக இம்மாநாட்டின் தொடக்க நிகழ்வில் தமிழ் பண்பாட்டு பாரம்பரிய இசை, நடன படைப்புகளுடன் சிறப்பு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். அதில், முத்தாய்ப்பு அங்கமாக மொரீஷியஸ் நாட்டின் நடனக் கலைஞர்களின் பரதநாட்டியமும், புதுச்சேரி தமிழ் பாரம்பரிய நடனக்கலைஞர்களின் பாரம்பரிய படைப்புகளும் இடம்பெற்றன.
மொரீஷியஸ் நாட்டில், மொரீஷியஸ் பல்கலைக்கழகத்தில் 16-வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு கோலாகலமாக நடைபெற்றது. மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபர் பார்லேன் வையாபூரி பண்பாட்டு மாநாட்டை தொடக்கி வைத்தார். இம்மாநாட்டில் மலேசிய பிரதிநிதித்துவ கெமிலாங் கூட்டுறவு கழக தலைமை நிர்வாகி கஜேந்திரன் சிதம்பரம், நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளி உருமாற்ற இயக்கத் தலைவர் டத்தோ டாக்டர் கனகராஜா ராமன் ஆகியோரின் தலைமையிலான 46 பேர் அடங்கிய குழுவினர் இதில் பங்கேற்றனர் மாநாட்டின் தொடக்க விழாவின்போது உலக பண்பாட்டு இயக்கத்தில் நீண்டகாலம் சேவையாற்றி வந்த மலேசிய நாட்டு பிரதிநிதித்துவ அமைப்பின் உதவித் தலைவரும் பிரபல அரசியல்வாதியும் சமூகநலவாதியும் எழுத்தாளருமான முனைவர் தி.இராமநாயகத்திற்கு பண்பாட்டுச் சேவை தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விருதை பெற்ற ஒரே பிரமுகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. முத்தாய்ப்பு அங்கம் மலேசியாவைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியும், உலக தமிழர் பண்பாட்டு இயக்க பொறுப்பாளர்களில் ஒருவருமான முன்னாள் தெலுக் கெமாங் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் கிருஷ்ணன் லட்சுமணனுக்கு வைரத் தமிழர் விருது வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து கெமிலாங் கூட்டுறவு கழகத் தலைமை நிர்வாகி கஜேந்திரன் சிதம்பரம், ஆசிரியர் மேனகா நாராயணசாமி, வெ.விஜயா ஜனார்த்தனன் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது. மேலும், உலகத் தமிழ்மாமணி விருது பெறும் 24 பிரமுகர்களில், ந.வி.பொன்னி வீரப்பன், மாநாட்டின் இணைச் செயலாளர் த.கணேசன் ஆகிய இருவரும் மலேசிய நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னதாக இம்மாநாட்டின் தொடக்க நிகழ்வில் தமிழ் பண்பாட்டு பாரம்பரிய இசை, நடன படைப்புகளுடன் சிறப்பு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். அதில், முத்தாய்ப்பு அங்கமாக மொரீஷியஸ் நாட்டின் நடனக் கலைஞர்களின் பரதநாட்டியமும், புதுச்சேரி தமிழ் பாரம்பரிய நடனக்கலைஞர்களின் பாரம்பரிய படைப்புகளும் இடம்பெற்றன. |
|||||
by Kumar on 03 Oct 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|