பொது இடத்தில் எச்சில் துப்பிய இருவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், இங்கிலாந்து அரசு, பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒரு புதிய சட்டத்தை கொண்டுவந்தது. இதன் படி, பொது இடங்களில், எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, நாய்களை சுற்றவிடுவது, சிகரெட் துண்டுகளை வீசுவது மற்றும் குப்பைகளை போடுவது போன்றவை, சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் கடும் குற்றங்களாக கருதப்படும். இந்நிலையில், பொது இடத்தில் எச்சில் துப்பிய இருவருக்கு, தேம்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், தலா, 30 ஆயிரம் ரூபாய், அபராதம் விதித்தது. இருவருக்கும், எச்சில் துப்பியதற்காக 8000 ரூபாய், அபராதம் விதிக்கப்பட்டு, கோர்ட்டில் ஆஜர் ஆகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இருவரும் ஆஜராக தவறியதால் கோர்டடை அவமதித்ததற்காக, தலா, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு இங்கிலாந்து மக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
|