|
|||||
2023-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிப்பு |
|||||
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசை நார்வே வழங்குகிறது. பிற பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது.
******************************************
ñ¼ˆ¶õ‹
******************
ஹங்கேரியில் பிறந்த கட்டாலின் கரிக்கோ, அமெரிக்காவை சேர்ந்த ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
*********************
கரோனா தொற்றுக்கு எதிராக பயனுள்ள எம்ஆர்என்ஏ தடுப்பூசி உருவாக்குவதற்கு இவர்களின் கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருது அறிவிப்பு நிகழ்ச்சியில் ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனம் கூறும்போது, “நமது நோய் எதிர்ப்பு அமைப்புடன் எம்ஆர்என்ஏ எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதுபற்றிய நமது புரிதலை இவர்கள் தங்களின் அற்புதமான கண்டுபிடிப்புகள் மூலம் அடிப்படையான மாற்றம் செய்துள்ளனர். இந்த நவீன காலத்தில் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிய கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கத்தில் இவர்களின் கண்டுபிடிப்புகள் முக்கியப் பங்காற்றி உள்ளன” என்று தெரிவித்துள்ளது.
**************************
இயற்பியல்
********************
எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
**********************
விஞ்ஞானிகளான பியரி அகோஸ்தினி, ஃபெரெங்க் க்ரவுஸ் மற்றும் அன்னி எல் ஹூலியர் ஆகியோருக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியில் அட்டோசெகன்ட் அதிர்வுகளை உருவாக்கும் சோதனை முறைக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
***************************
விஞ்ஞானிகள் மூன்று பேரும் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் உலகிற்குள் இருக்கும் எலக்ட்ரான்களை ஆய்வு செய்வதற்கான கருவியை மனிதகுலத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக அங்கீகரிக்கப்படுகிறார்கள். பியரி அகோஸ்தினி, ஃபெர்ங்க் க்ரவுஸ் மற்றும் அன்னி எல் ஹூலியர் ஒளியில் மிகக் குறுகிய துடிப்புகளை உருவாக்கும் வழிமுறைகளை நிரூபித்துள்ளனர். இது எலக்ட்ரான்கள் நகரும் அல்லது விரைவாக ஆற்றலை மாற்றும் விரைவான செயல்முறைகளை அளவிடப் பயன்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
***************************
வேதியியல்
*************************
2023 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மவுங்கி பவேண்டி, அமெரிக்காவை சேர்ந்த லூயி புருஸ், ரஷ்யாவை அலெக்செய் எகிமோவு ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகள் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்பு ( discovery and synthesis of quantum dots) தொடர்பான ஆய்வு மேற்கொண்டதற்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
***************************
இலக்கியம்
******************************
2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸ் என்பவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கவிதை, உரைநடை, சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம் ஆகிய துறைகளில் இவரது பங்களிப்பிற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
*********************************
கடந்த 1959-ம் ஆண்டில் நார்வேநாட்டின் ஹாஜேசண்ட் பகுதியில் ஜான் பாஸ் பிறந்தார். 7 வயதில் மிகப்பெரிய விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். இந்த விபத்து அவரது வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தி பிற்காலத்தில் எழுத்தாளராக உருவெடுக்கச் செய்தது. கடந்த 1983-ம் ஆண்டில் அவரது முதல் நாவல் ரெட்- பிளாக் வெளியானது.
***********************
70-க்கும் மேற்பட்ட படைப்புகள்
***************************
இதைத் தொடர்ந்து நாவல், கவிதை, கட்டுரை, நாடகம் என 70-க்கும் மேற்பட்ட படைப்புகளை அவர் உருவாக்கி உள்ளார். அவரது முக்கிய படைப்புகள் சுமார் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. டெல்லி டெலிகிராப் நாளிதழ் வெளியிட்ட உலகின் 100 அறிவுஜீவிகளில் எழுத்தாளர் ஜான் பாஸ் 83-வது இடத்தைப் பிடித்தார். அவருக்கு 2023-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
***************************
அமைதிக்கான நோபல் பரிசு
*******************************
2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாடிட்ல் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, பலமுறை சிறை சென்ற நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசை நார்வே வழங்குகிறது. பிற பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது. மருத்துவம் ஹங்கேரியில் பிறந்த கட்டாலின் கரிக்கோ, அமெரிக்காவை சேர்ந்த ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு எதிராக பயனுள்ள எம்ஆர்என்ஏ தடுப்பூசி உருவாக்குவதற்கு இவர்களின் கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருது அறிவிப்பு நிகழ்ச்சியில் ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனம் கூறும்போது, “நமது நோய் எதிர்ப்பு அமைப்புடன் எம்ஆர்என்ஏ எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதுபற்றிய நமது புரிதலை இவர்கள் தங்களின் அற்புதமான கண்டுபிடிப்புகள் மூலம் அடிப்படையான மாற்றம் செய்துள்ளனர். இந்த நவீன காலத்தில் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிய கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கத்தில் இவர்களின் கண்டுபிடிப்புகள் முக்கியப் பங்காற்றி உள்ளன” என்று தெரிவித்துள்ளது. இயற்பியல் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளான பியரி அகோஸ்தினி, ஃபெரெங்க் க்ரவுஸ் மற்றும் அன்னி எல் ஹூலியர் ஆகியோருக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியில் அட்டோசெகன்ட் அதிர்வுகளை உருவாக்கும் சோதனை முறைக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் மூன்று பேரும் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் உலகிற்குள் இருக்கும் எலக்ட்ரான்களை ஆய்வு செய்வதற்கான கருவியை மனிதகுலத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக அங்கீகரிக்கப்படுகிறார்கள். பியரி அகோஸ்தினி, ஃபெர்ங்க் க்ரவுஸ் மற்றும் அன்னி எல் ஹூலியர் ஒளியில் மிகக் குறுகிய துடிப்புகளை உருவாக்கும் வழிமுறைகளை நிரூபித்துள்ளனர். இது எலக்ட்ரான்கள் நகரும் அல்லது விரைவாக ஆற்றலை மாற்றும் விரைவான செயல்முறைகளை அளவிடப் பயன்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல் 2023 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மவுங்கி பவேண்டி, அமெரிக்காவை சேர்ந்த லூயி புருஸ், ரஷ்யாவை அலெக்செய் எகிமோவு ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகள் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்பு ( discovery and synthesis of quantum dots) தொடர்பான ஆய்வு மேற்கொண்டதற்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸ் என்பவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கவிதை, உரைநடை, சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம் ஆகிய துறைகளில் இவரது பங்களிப்பிற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1959-ம் ஆண்டில் நார்வேநாட்டின் ஹாஜேசண்ட் பகுதியில் ஜான் பாஸ் பிறந்தார். 7 வயதில் மிகப்பெரிய விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். இந்த விபத்து அவரது வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தி பிற்காலத்தில் எழுத்தாளராக உருவெடுக்கச் செய்தது. கடந்த 1983-ம் ஆண்டில் அவரது முதல் நாவல் ரெட்- பிளாக் வெளியானது. 70-க்கும் மேற்பட்ட படைப்புகள் இதைத் தொடர்ந்து நாவல், கவிதை, கட்டுரை, நாடகம் என 70-க்கும் மேற்பட்ட படைப்புகளை அவர் உருவாக்கி உள்ளார். அவரது முக்கிய படைப்புகள் சுமார் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. டெல்லி டெலிகிராப் நாளிதழ் வெளியிட்ட உலகின் 100 அறிவுஜீவிகளில் எழுத்தாளர் ஜான் பாஸ் 83-வது இடத்தைப் பிடித்தார். அவருக்கு 2023-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு 2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாடிட்ல் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, பலமுறை சிறை சென்ற நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. |
|||||
by on 09 Oct 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|