|
|||||
3-ம் ஆண்டு அயலகத் தமிழர் தினம் 2024 |
|||||
3-ம் ஆண்டு அயலகத் தமிழர் தினம் 2024 ஜனவரி 12-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த விழாவில்.......
*அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்களை துவக்கி வைத்தல்..
*உள்ளுர் மற்றும் அயலக உலகத்தமிழர்களிடையே (தொழில் முனைவோர்) இணைப்புகளை ஏற்படுத்துதல்.
*அயலக இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பாதுகாப்பான முதலீடு தொடர்பான ஆலோசனை வழங்குதல்.
*அயலகத் தமிழர்களிடையே தமிழ் மொழியின் தொன்மை, வளர்ச்சி, கலை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (இரண்டு தினங்கள்).
*நாட்டுப்புறப் பாடல் மற்றும் செவ்வியல் தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடத்துதல்.
*இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தல்.
* “அயலகத் தமிழர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்ள கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திட, “எனது கிராமம்” என்கின்ற திட்டத்தினை துவக்கி வைத்தல்.
* இப்பெருவிழாவில் நேரடியாக கலந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்ய இணைய தளம் இதில் பங்கேற்க விரும்பும் அயழக தமிழர்கள் https://nrtamils.tn.gov.in/en/nrt-day/beforereg/ என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். |
|||||
by Kumar on 28 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|