போதைப்பழக்கம் வேண்டாம், மாணவர்கள் முன் உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர் ரோபோ சங்கர்
சென்னை, இராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரி மனோகர் மற்றும் நடிகர் ரோபோ சங்கர் கலந்து கொண்டிருந்தனர். தமிழக அரசும் காவல்துறையும் எடுக்கும் முயற்சிகள், போதைப் பழக்கத்தால் ஏற்படும் குற்றங்கள் மாணவர்களுக்கு காணொளி மூலம் விளக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து திரை பிரபலமான ரோபோ சங்கர் பேசினார். அப்போது ஐந்து மாதங்கள் படுத்த படுக்கையாகி, சாவின் விளிம்பிற்குச் சென்று விட்டேன், அதற்குக் காரணம் என்னிடமிருந்த போதைப் பழக்கங்கள் தான். தற்கொலை எண்ணங்களாலும் பாதிக்கப்பட்டேன், இப்போது தெளிவாக உள்ளேன். மாணவர்களாகிய நீங்கள் எந்த போதைப் பழக்கத்திற்கும் அடிமையாகக் கூடாது. மேலும்,போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால், அதனை விட மிகச் சிரமப்பட்டதையும் அதிகமாக வீட்டில் சண்டையிட்டதையும் குறிப்பிட்டு உங்களுக்கு நானே முன்னுதாரணம், நீங்கள் எந்த போதைப் பழக்கத்திற்கும் அடிமையாகக் கூடாது, உங்களது ஆரோக்கியம் தான் நாட்டின் ஆரோக்கியம் என்று கூறினார். மேலும் பல குரல்களில் பேசி மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.
|