உறுதிமொழியோடு தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டுள்ள குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
ஜூன் 12,உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. குழந்தை தொழிலாளர்களுக்கான தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பணியில் ஈடுபடுவதை குற்றமாக அறிவிக்கிறது. 18 வயதிற்கு உள்ளான பதின் பருவத்தினரும் அபாயகரமான வேலைகளில் ஈடுபடாமல் இருப்பதற்கான வரைமுறைகளையும் இச்சட்டம் தெரிவிக்கிறது.தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில், குழந்தைகளின் சிறகுகளை கத்தரித்து, பணியிடம் என்ற சிறையில் அடைப்பது மிகப்பெரிய கொடுமை, தமிழக அரசு குழந்தை தொழிலாளர் பற்றிய விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்துவதை தலையாயக் கடமையாகக் கொண்டுள்ளது. 2025- ஆம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார். குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க சென்னை தலைமைச் செயலகத்தில் செயலாளர் இறையன்பு அவர்கள் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்கள் தலைமையிலும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பிற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
|