சந்திராயன் திட்டத்தின் கீழ் தற்போது வெற்றிகரமாக சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தைச் செலுத்த LVM-3M4 என்ற ஏவூர்தி (Rocket) பயன்படுத்தப்பட்டது. இதில் சேலம் உருக்காலை தயார் செய்த தகடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.வெற்றிகரமாக விண்கலம் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதையடுத்து இஸ்ரோவின் திரவ இயக்கவியல் மையத்தின் துணை இயக்குனர் மருதாச்சலம் பாராட்டுக் கடிதத்தினை சேலம் உருக்காலைக்கு அனுப்பியுள்ளார் .அதில் LVM-3M4 இராக்கெட்டின் உந்துவிசை இயந்திரம் 2.3 மில்லி மீட்டர் குளிரூட்டப்பட்ட தகடுகளுடன் வெப்பத்தை எதிர்க்கும் தன்மை கொண்டது. இந்த வெப்பத்தை எதிர்க்கும் குளிர், உருட்டப்பட்ட தகடுகளை தேவையான தர நெறிமுறைகளுடன் இஸ்ரோவிற்கு வழங்கிய சேலம் நிர்வாகத்தைப் நாங்கள் பாராட்டுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
|