சீனாவில் அமைந்துள்ள ஹாங்சோவ் நகரில் 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெற உள்ளன. இதற்கென இந்தியக் கால்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். இவ்வணியில் தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் சிவசக்தி நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடிப் பகுதியைச் சேர்ந்தவர் சிவசக்தி நாராயணன்.இளவயதில் தந்தையை இழந்தவர். தாயுடன் வசித்து வருகிறார். சிவசக்தி நாராயணன் இந்தியன் சூப்பர் லீக் வளர்ந்து வரும் வீரர் விருது (2022-2023),FPAI-ன் (Football Players Association of India) சிறந்த இளம் வீரர் 2023 விருதினையும் பெற்றுள்ளார்.
|