இத்தாலியின் வெனிஸ் நகரத்தின் சான் லாசரோ என்ற தீவுப் பகுதியில் இயங்கும் நூலகத்தில் தமிழ் ஓலைச்சுவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ் பாரதன் என்பவர் தன் முனைவர் பட்ட ஆய்விற்காக தமிழ்- கிரேக்க ஒப்பாய்வினை மேற்கொண்டுள்ளார். கருத்தரங்கிற்காக இவர் இத்தாலியின் வெனிஸ் பகுதிக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள நூலகத்தில் தமிழ் ஓலைச்சுவடிகளை கண்டறிந்துள்ளார். இந்த நூலகத்தில் அரிய ஆவணங்கள் பல பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தமிழ் ஓலைச்சுவடிகள் லமூலிக் லாங்குவேஜ் என்று பெயரிடப்பட்டு இருந்துள்ளன. தமிழ் என்று தெரியாமலே அவை பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. பேராசிரியர் மார்கிரீடா ட்ரெண்டோ, தமிழறிஞர் பேராசிரியர் அண்ணாமலை ஆகியோர் ஓலைச்சுவடிகள் இருப்பதை தெரியப்படுத்தியுள்ளனர்.அதன் பிறகு ஓலைச்சுவடிகளைப் படிக்க அனுமதிக்கப்படாமல், தொடர் முயற்சிகளுக்குப் பின் தமிழ் பாரதன் அதனைப் படித்திருக்கிறார். 170 ஓலைச்சுவடிகள் இருபுறமும் எழுதப்பட்டவையாக உள்ளன. 'திருச்சிராப்பள்ளி', 'காஞ்சிபுரம்' என்ற ஊர் பெயர்கள் மற்றும் 'ஞான' என்ற சொல்லும் அதிகமாக எழுதப்பட்டுள்ளன.
|