LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இலங்கையில் மன்னர்கால தமிழ் கிராமம்

 

இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான திருக்கோணமலை மாவட்டத்தில்  திருக்கோணமலைப் பட்டினத்திலிருந்து நாட்பது கிலோ மீற்றர் தூரத்திலுள்ள சைவத் தமிழ் கிராமம் குச்சவெளி. குளக்கோட்டு மன்னன் கோணேசர் கோவிலைக் கட்டித் திருப்பணியை நிறைவேற்றியபின் கோணேசர் கோவில் தொண்டுகளுக்காகக் குச்சவெளியில் மக்களைக் குடியேற்றினான். அவர்கள் அங்கிருந்து தர்ப்பைப் புல்லில் 'கூர்ச்சம்" செய்து கோவிலுக்கு அனுப்பி வந்தார்கள். இது அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியாகும். கூர்ச்சம் செய்து அனுப்பிவந்த மக்கள் வாழ்ந்தமையால், கூர்ச்சவெளி என்பது காலக்கிரமத்தில் குச்சவெளியென்று பெயர்மாற்றம் ஏற்பட்டதாகப் பெரியோர்கன் கூறுகின்றார்கள்.
'*****************************
இங்கிருக்கும் சித்திவிநாயகர் ஆலயத்தை மத்தியாகக் கொண்டு நாச்சியார்மலை, வெள்ளாட்டி மலை, செம்பிமலை, கன்னிபாய்ந்தமலை, பறையன்கல்மடுமலை, நடுவுமலை, பெரியமலை எனப் பல மலைகளும், பிராமணமடு, சின்னக் குருப்பிட்டிக் குளம், பெரிய குருப்பிட்டிக் குளம், பறையன் கல்மடு, அட்டமடு, காக்கயன் நெடுங்கேணி எனப் பல குளங்களும் காணப்படுகின்றன.
*****************************
குருவிக்காவற் பாட்டுக்கள்
************************
குச்சவெளி சைவத் தமிழ்க் கிராமமாயிருந்ததினால் பிராமணர்கள் வாழ்வதற்குத் தனியிடம் ஒதுக்கி அவர்கள் வாழ்ந்த இடம் பிராமணமடு என்றும், குருமாருக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் பெரிய குருப்பிட்டி, சின்னக் குருப்பிட்டி என்றும் பெயர்கள் வழங்கிவந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாயிருக்கின்றது. இங்குள்ள மலைகளையும், குளங்களையும், விவசாய முக்கியத் துவங்களையும் குறிப்பிடும் 'குருவிக்காவற் பாட்டுக்கள்" கர்ண பரம்பரையாக இங்குள்ள மக்களால் பாடப்பட்டு வருகின்றன.
***************************
இப்பாட்டில் கூறப்பட்டுள்ள கரடிமலை என்பது குச்சவெளியில் கடற்கரையோரமாக இருக்கின்றது. இந்த மலையிலும் தமிழ் மக்கள் பிள்ளையாரை வைத்து வழிபட்டு வந்திருக்கின்றார்கள். இந்த மலையில் ஒரு ஆலயத்தைக் கட்ட முயற்சித்தபோது அரசாங்கம் அதைத் தடுத்துவிட்டது. பின்னர் அந்த மலையடிவாரத்தில் சுமார் பதினைந்து வருடங்களுக்குமுன் கற்பக்கிரகம். அர்த்தமண்டபம், மகாமண்டபங்களைக் கொண்ட ஓர் அழகான கோவிலைக் கட்டிப் பிள்ளையாரை ஸ்தாபித்து பூசை வழிபாடு விழாக்கள் செய்துவருகின்றார்கள். இந்தக் கோவிலிலும் மேற்கொண்டு எதுவும் செய்யவிடாமல் புதைபொருளாராய்ச்சித் திணைக்களம் 1980களில் தடுத்துள்ளது.
**********************************
பிள்ளையார் திருவுருவம் கிடைத்தது
********************************
இங்கு குச்சவெளி போலீசுக்கு முன்னால் அமைந்துள்ள வீதியில் குச்சவெளி சித்திவிநாயகர் கோவில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. கடற்கரையை அடுத்துள்ள இந்தக் கிராமத்தில் வாழும் மக்களின் முக்கிய தொழில் விவசாயம். பண்டைக் காலத்தில் விவசாய விளை நிலங்களைச் சுற்றிக் காடுகள் நிறைந்திருந்தன. அந்தக் காட்டில் வேடர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் காடுகளில் தேன் எடுத்தும், கிழங்குகள் கிண்டியெடுத்தும் வாழ்ந்து வந்தார்கள். இது மன்னர்கால தமிழ் கிராமம்  என்று அறியப்படுகிறது.
***************************
ஒரு நாள் ஒரு வேடன் அல்லைக் கிளங்கு கிண்டும்போது நிலத்தினடியில் ஒரு கல்லில் ஆயுதம் பட்டு அக்கல்லிலிருந்து இரத்தம் சொட்டுவதைக் கண்டு ஆச்சரியமடைந்தான். இந்த அதிசயத்தை அக்காலத்தில் அந்தக் கிராமத்தின் பெரிய தலைமைக்காரராயிருந்த சந்தநாதர் என்பவரிடம் வந்து கூறினான். அவர் தவிக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு போய் நிலத்தை அகழ்வித்தபோது ஒரு பிள்ளையார் திருவுருவம் கிடைத்தது. அதன் புயத்திலிருந்து இரத்தம் சுரந்துகொண்டிருந்ததாம்.
*******************************
மக்களுடைய பக்தி 
************************
அந்த பிள்ளையாரைப் பயபக்தியோடு மங்கல வாத்தியங்கள் ஒலிக்க எழுந்தருளச் செய்து குச்சவெளி மக்கள் குடியிருக்கும் இடத்தில் அரசமரத்தடியில் வைத்துப் பூசை செய்வித்து வந்தார். சுமார் இருநூற்றைம்பது வருடங்களுக்கு முன் இது நிகழ்ந்ததாக முதியவர்கள் கூறுகின்றார்கள். இந்த அரசமரம் இன்றும் இருக்கின்றது.
******************************
சந்தநாதர் காலத்தில் மண்சுவர் வைத்துக் கட்டப்பட்டு ஓலையால் வேய்ந்த கோவிலில் இருந்த பிள்ளையாரைப் பய பக்தியோடு மக்கள் வழிபட்டு வந்தார்கள். மக்களுடைய பக்தி விஸ்வாசத்திற்கேற்பப் பிள்ளையாரு அருள்புரிந்து வந்தார். நினைத்த காரியங்கள் நிறைவேறின. நோய்கள் நீங்கின. இத்தகைய அருட்செயலால் பக்தி பெருகவே திரு. காசிநாதர் என்பவருடைய காலத்தில் இவ்வாலயம் கற்கோவிலாகக் கட்டப்பட்டது.
*******************************
பத்து நாள் அலங்கார உற்சவம்
**************************
இப்பொழுது இந்தப் பரம்பரையின் எட்டாவது தலைமுறையினரின் பராபரிப்பில் இவ்வாலயம் இருந்துவருகின்றது. கதிர்காமர், கறுவல்தம்பி, கார்த்திகேசு, வேலுப்பிள்ளை என்பவர்கள் முறையே மணியகாரர்களாயிருந்து பராமரித்து வந்த, இந்தக் கோவிலில் 1944ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 1990களில் கும்பாபிஷேகம் இடம்பெற்று, இப்போது பாலஸ்தாபனம் செய்து கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று, 03.09.2023 இறுதியாக கும்பாபிஷேகம் பரிபாலனசபை மூலம் இடம்பெற்றுள்ளது.
**********************************
சித்திவிநாயகர் கோவிலில் உச்சிக்காலம், மாலைச்சந்தியாகிய இரண்டுகால பூசைகளும், கும்பாபிஷேக தினத்தை முதல் நாளாகக்கொண்டு பத்து நாள் அலங்கார உற்சவமும், பிள்ளையார்கதை, கந்தசஷ்டி, திருவாதிரை, ஆவணிச் சதுர்த்தி, சிவராத்திரி, சித்திரா பூரணை முதலிய விசேஷ பூசைகளும் நடைபெற்று வருகின்றன. கந்த புராணப் படிப்பும் இங்கு நடைபெறுகின்றது.
*******************************
இவ்வாலயத்தில் பிராமணக் குருக்களும், சைவக் குருக்களும் பூசை செய்து வந்திருக்கின்றார்கள்.
*************************
அழகாக காட்சியளிக்கின்றது
'************************
'அல்லைக் கிளங்கின் அடிமுடி கண்டோர் கல்லைப் பிளக்கும் வல்லவராவர்' என்பது இவ் வாலயத்தின் தாரக மந்திரமாக மக்களுடைய வாயில் ஒலிப்பதைக் கேட்கக்கூடியதாயிருந்து வருகின்றது. இந்த ஆலயத்திற்கும், குச்சவெளி செம்பிமலை சிவன் ஆலயத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் காணப்பட்டு வந்துள்ளன.
**********************************
தற்பொழுது ஆலயம் கும்பாபிஷேகம் கண்டு அழகாக காட்சியளிக்கின்றது. மேலும், கண்ணகி, நாகதம்பிரான் ஆலயங்கள் ஆலய வெளி வீதியில் அமைக்கப்பட்டுள்ளன. 

இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான திருக்கோணமலை மாவட்டத்தில்  திருக்கோணமலைப் பட்டினத்திலிருந்து நாட்பது கிலோ மீற்றர் தூரத்திலுள்ள சைவத் தமிழ் கிராமம் குச்சவெளி. குளக்கோட்டு மன்னன் கோணேசர் கோவிலைக் கட்டித் திருப்பணியை நிறைவேற்றியபின் கோணேசர் கோவில் தொண்டுகளுக்காகக் குச்சவெளியில் மக்களைக் குடியேற்றினான். அவர்கள் அங்கிருந்து தர்ப்பைப் புல்லில் 'கூர்ச்சம்" செய்து கோவிலுக்கு அனுப்பி வந்தார்கள். இது அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியாகும். கூர்ச்சம் செய்து அனுப்பிவந்த மக்கள் வாழ்ந்தமையால், கூர்ச்சவெளி என்பது காலக்கிரமத்தில் குச்சவெளியென்று பெயர்மாற்றம் ஏற்பட்டதாகப் பெரியோர்கன் கூறுகின்றார்கள்.

இங்கிருக்கும் சித்திவிநாயகர் ஆலயத்தை மத்தியாகக் கொண்டு நாச்சியார்மலை, வெள்ளாட்டி மலை, செம்பிமலை, கன்னிபாய்ந்தமலை, பறையன்கல்மடுமலை, நடுவுமலை, பெரியமலை எனப் பல மலைகளும், பிராமணமடு, சின்னக் குருப்பிட்டிக் குளம், பெரிய குருப்பிட்டிக் குளம், பறையன் கல்மடு, அட்டமடு, காக்கயன் நெடுங்கேணி எனப் பல குளங்களும் காணப்படுகின்றன.

குருவிக்காவற் பாட்டுக்கள்

குச்சவெளி சைவத் தமிழ்க் கிராமமாயிருந்ததினால் பிராமணர்கள் வாழ்வதற்குத் தனியிடம் ஒதுக்கி அவர்கள் வாழ்ந்த இடம் பிராமணமடு என்றும், குருமாருக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் பெரிய குருப்பிட்டி, சின்னக் குருப்பிட்டி என்றும் பெயர்கள் வழங்கிவந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாயிருக்கின்றது. இங்குள்ள மலைகளையும், குளங்களையும், விவசாய முக்கியத் துவங்களையும் குறிப்பிடும் 'குருவிக்காவற் பாட்டுக்கள்" கர்ண பரம்பரையாக இங்குள்ள மக்களால் பாடப்பட்டு வருகின்றன.

இப்பாட்டில் கூறப்பட்டுள்ள கரடிமலை என்பது குச்சவெளியில் கடற்கரையோரமாக இருக்கின்றது. இந்த மலையிலும் தமிழ் மக்கள் பிள்ளையாரை வைத்து வழிபட்டு வந்திருக்கின்றார்கள். இந்த மலையில் ஒரு ஆலயத்தைக் கட்ட முயற்சித்தபோது அரசாங்கம் அதைத் தடுத்துவிட்டது. பின்னர் அந்த மலையடிவாரத்தில் சுமார் பதினைந்து வருடங்களுக்குமுன் கற்பக்கிரகம். அர்த்தமண்டபம், மகாமண்டபங்களைக் கொண்ட ஓர் அழகான கோவிலைக் கட்டிப் பிள்ளையாரை ஸ்தாபித்து பூசை வழிபாடு விழாக்கள் செய்துவருகின்றார்கள். இந்தக் கோவிலிலும் மேற்கொண்டு எதுவும் செய்யவிடாமல் புதைபொருளாராய்ச்சித் திணைக்களம் 1980களில் தடுத்துள்ளது.

பிள்ளையார் திருவுருவம் கிடைத்தது

இங்கு குச்சவெளி போலீசுக்கு முன்னால் அமைந்துள்ள வீதியில் குச்சவெளி சித்திவிநாயகர் கோவில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. கடற்கரையை அடுத்துள்ள இந்தக் கிராமத்தில் வாழும் மக்களின் முக்கிய தொழில் விவசாயம். பண்டைக் காலத்தில் விவசாய விளை நிலங்களைச் சுற்றிக் காடுகள் நிறைந்திருந்தன. அந்தக் காட்டில் வேடர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் காடுகளில் தேன் எடுத்தும், கிழங்குகள் கிண்டியெடுத்தும் வாழ்ந்து வந்தார்கள். இது மன்னர்கால தமிழ் கிராமம்  என்று அறியப்படுகிறது.

ஒரு நாள் ஒரு வேடன் அல்லைக் கிளங்கு கிண்டும்போது நிலத்தினடியில் ஒரு கல்லில் ஆயுதம் பட்டு அக்கல்லிலிருந்து இரத்தம் சொட்டுவதைக் கண்டு ஆச்சரியமடைந்தான். இந்த அதிசயத்தை அக்காலத்தில் அந்தக் கிராமத்தின் பெரிய தலைமைக்காரராயிருந்த சந்தநாதர் என்பவரிடம் வந்து கூறினான். அவர் தவிக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு போய் நிலத்தை அகழ்வித்தபோது ஒரு பிள்ளையார் திருவுருவம் கிடைத்தது. அதன் புயத்திலிருந்து இரத்தம் சுரந்துகொண்டிருந்ததாம்.

மக்களுடைய பக்தி

பிள்ளையாரைப் பயபக்தியோடு மங்கல வாத்தியங்கள் ஒலிக்க எழுந்தருளச் செய்து குச்சவெளி மக்கள் குடியிருக்கும் இடத்தில் அரசமரத்தடியில் வைத்துப் பூசை செய்வித்து வந்தார். சுமார் இருநூற்றைம்பது வருடங்களுக்கு முன் இது நிகழ்ந்ததாக முதியவர்கள் கூறுகின்றார்கள். இந்த அரசமரம் இன்றும் இருக்கின்றது.

சந்தநாதர் காலத்தில் மண்சுவர் வைத்துக் கட்டப்பட்டு ஓலையால் வேய்ந்த கோவிலில் இருந்த பிள்ளையாரைப் பய பக்தியோடு மக்கள் வழிபட்டு வந்தார்கள். மக்களுடைய பக்தி விஸ்வாசத்திற்கேற்பப் பிள்ளையாரு அருள்புரிந்து வந்தார். நினைத்த காரியங்கள் நிறைவேறின. நோய்கள் நீங்கின. இத்தகைய அருட்செயலால் பக்தி பெருகவே திரு. காசிநாதர் என்பவருடைய காலத்தில் இவ்வாலயம் கற்கோவிலாகக் கட்டப்பட்டது.

பத்து நாள் அலங்கார உற்சவம்

இப்பொழுது இந்தப் பரம்பரையின் எட்டாவது தலைமுறையினரின் பராபரிப்பில் இவ்வாலயம் இருந்துவருகின்றது. கதிர்காமர், கறுவல்தம்பி, கார்த்திகேசு, வேலுப்பிள்ளை என்பவர்கள் முறையே மணியகாரர்களாயிருந்து பராமரித்து வந்த, இந்தக் கோவிலில் 1944ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 1990களில் கும்பாபிஷேகம் இடம்பெற்று, இப்போது பாலஸ்தாபனம் செய்து கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று, 03.09.2023 இறுதியாக கும்பாபிஷேகம் பரிபாலனசபை மூலம் இடம்பெற்றுள்ளது.

சித்திவிநாயகர் கோவிலில் உச்சிக்காலம், மாலைச்சந்தியாகிய இரண்டுகால பூசைகளும், கும்பாபிஷேக தினத்தை முதல் நாளாகக்கொண்டு பத்து நாள் அலங்கார உற்சவமும், பிள்ளையார்கதை, கந்தசஷ்டி, திருவாதிரை, ஆவணிச் சதுர்த்தி, சிவராத்திரி, சித்திரா பூரணை முதலிய விசேஷ பூசைகளும் நடைபெற்று வருகின்றன. கந்த புராணப் படிப்பும் இங்கு நடைபெறுகின்றது.

இவ்வாலயத்தில் பிராமணக் குருக்களும், சைவக் குருக்களும் பூசை செய்து வந்திருக்கின்றார்கள். அழகாக காட்சியளிக்கின்றது'

அல்லைக் கிளங்கின் அடிமுடி கண்டோர் கல்லைப் பிளக்கும் வல்லவராவர்' என்பது இவ் வாலயத்தின் தாரக மந்திரமாக மக்களுடைய வாயில் ஒலிப்பதைக் கேட்கக்கூடியதாயிருந்து வருகின்றது. இந்த ஆலயத்திற்கும், குச்சவெளி செம்பிமலை சிவன் ஆலயத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் காணப்பட்டு வந்துள்ளன.

தற்பொழுது ஆலயம் கும்பாபிஷேகம் கண்டு அழகாக காட்சியளிக்கின்றது. மேலும், கண்ணகி, நாகதம்பிரான் ஆலயங்கள் ஆலய வெளி வீதியில் அமைக்கப்பட்டுள்ளன. 

 

by Kumar   on 18 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.