LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?

நிலவின் மேற்பரப்பில் முதன்முதலில் ஒரு தனியார் நிறுவனத்தின் விண்கலம் தரையிறங்கிய தருணம் இது.

 

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அமைந்திருக்கும் இன்டுயடிவ் மெஷின்ஸ் நிறுவனம் அதன் ஒடிசியஸ் ரோபோவை நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறக்கியுள்ளது.

 

விண்கலம் தற்காலிகமாகச் செயலிழந்ததைக் கண்டுபிடிக்கச் சில நிமிடங்கள் ஆனதாகவும், ஆனால், சிறிது நேரத்தில், அது சரி செய்யப்பட்டு, சமிக்ஞைகள் கொடுக்கத் தொடங்கியதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதையடுத்து, அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

 

கடந்த வாரம் புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து ஒடிசியஸ் விண்கலம் ஏவப்பட்டது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஒடிசியஸ் லேண்டர் மூலம் ஆறு அறிவியல் கருவிகளை நிலவுக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவின் தென் துருவப் பகுதியில் அமெரிக்காவும் தடம் பதித்துள்ளது.

 

அமெரிக்க விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் இந்த வெற்றி குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இதற்குக் காரணம், 50 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விண்கலம் நிலவில் கால் பதித்திருக்கிறது.

 

கடைசியாக, நாசா 1972-ல் தனது விண்கலத்தை நிலவில் தரையிறக்கியிருந்தது.

 

தரையிறங்கும் பணி தொடங்குவதற்கு முன்பே, அந்த விண்கலத்தின் கட்டுப்பாட்டாளர்கள் மிக மோசமான தொழில்நுட்பச் சிக்கலைச் சமாளிக்க வேண்டியிருந்தது. விண்கலத்தில் உயரத்தையும் வேகத்தையும் கணக்கிடும் லேசர்கள் திடீரெனச் செயல்படாமல் போனது. எனினும் சாவிடமிருந்து வாங்கிய சில லேசர்கள் அந்த விண்கலத்தில் இருந்ததால், பொறியாளர்கள் அவற்றைக் கணினியில் இணைத்துச் செயல்பட வைத்தனர்.

 

ஒடிஸியஸ் விண்கலம் இந்திய நேரப்படி பிப்ரவரி 22-ம் தேதி மாலை 6.23 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. முதலில் நிலவில் தரையிறங்கிய தானியங்கிகளிடமிருந்து எந்த சமிக்ஞையும் வரவில்லை. பின், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்த ரோபோக்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

 

இந்தத் தொழில்நுட்பச் சிக்கல், தரையிறக்கம் தொடர்பாகச் சில கவலைகளை ஏற்படுத்தியது. ஆனால், ஒரு சில மணி நேரத்திற்குள் அது சரி செய்யப்பட்டு, நிலவிலிருந்து படங்கள் உள்ளிட்ட தரவுகளை அவை அனுப்பியதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

 

ரோபோ தரையிறங்கிய இடம், மலாபெர்ட் எனப்படும் சுமார் 5 கிலோமீட்டர் உயரமுள்ள மலை போன்ற பகுதிக்கு அடுத்ததாக உள்ள ஒரு பள்ளம் நிறைந்த நிலப்பரப்பாகும். இந்தப் பகுதியில் உறைந்த நிலையில் நீர் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

 

இதுதொடர்பாகப் பேசிய நாசாவின் கிரக அறிவியல் இயக்குநர் லோரி கிளேஸ், “நாம் அந்தப் பனியைப் பருகக்கூடிய குடிநீராக மாற்றலாம் என்றும் ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனை பிரித்தெடுத்து, அவற்றை எரிபொருளாகவும், விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கும் பயன்படுத்த முடியும் என்றும் கூறியுள்ள லோரி கிளேஸ் இது உண்மையில் மனித ஆய்வுக்கு உதவும்,”என தெரிவித்துள்ளார்.

by Kumar   on 06 Mar 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.