LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கோயில் திருவிழாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரவசத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்படியென்ன முக்கியத்துவம் இந்த திருவிழாவில்?

 

பெண்கள் மட்டுமே கொண்டாடும் விழாக்கள் உள்ளதுபோல, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்களும் உண்டு..

 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கீழக்குறிச்சிப்பட்டியில் 02/04/2024 அன்று ஒரு விநோதத் திருவிழா நடந்துள்ளது. இந்தக் கிராமத்தில், பொன்னழகி அம்மன் கோயில் ஒன்று பழமையானது. இந்தக் கோயிலில் வருடந்தோறும் திருவிழா நடைபெறும்.

 

பங்குனித் திருவிழாவையொட்டி, கோயிலிலுள்ள பொன்னழகி அம்மனுக்கு ஆடு, சேவல் பலியிட்டுப் பொங்கல் வைப்பது வழக்கம். அதன்படியே, இப்போதும் பக்தர்கள், ஆடு, சேவல் பலியிட்டு நேர்த்திக்கடன்களைச் செலுத்தினார்கள்..

 

தலையில் கோழி இறகு

 

இந்தத் திருவிழாவில் ஹைலைட்டே சேறு பூசும் நிகழ்வுதான். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே கண்மாய் ஒன்று உள்ளது. இந்த கண்மாயில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சேற்றில் புரண்டு உடம்பில் சேற்றைப் பூசிக் கொள்வார்கள்..

 

பிறகு, மாலை அணிந்து தலையில் கோழி இறகையும் வைத்துக் கொண்டு, சாமியாடுவார்கள். கண்மாயிலிருந்து கோயில் வரை ஆடிக்கொண்டே வருவார்கள். பிறகு, சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும்.

 

இந்த திருவிழாவில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு உடலில் சேறுபூசி, தலையில் கோழி இறகு வைத்து ஆடினார்கள்.

 

இதற்குக் காரணம், சேற்றினை உடலில் பூசிக்கொள்வதால், உடல் ஆரோக்கியம் கிடைக்கும். அத்துடன், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்ல, இப்படிக் கோழி இறகினைத் தலையில் வைத்து வழிபடுவதால் குடும்ப உறவுகள் தழைக்குமாம். நினைத்த காரியங்களும் கைகூடும் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

by Kumar   on 07 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.