|
|||||
அரிசி தரும் பலன்கள் - டாக்டர். ரகுபதி |
|||||
![]() அரிசி தரும் பலன்கள் - டாக்டர். ரகுபதி முன்னுரை: தமிழ்நாட்டு மக்களுடைய அன்றாட வாழ்வில் அரிசியானது மிக முக்கிய இடம் பெறுகின்றது. மனிதனின் பசியைத் தணிக்கும் ஒன்றாக அரிசி செயல்படுகிறது. எத்தனை நவீன உணவுகள் சாப்பிட்டாலும் ஒருவேளையாவது சோறு சாப்பிட மனிதன் ஏங்குகின்றான். மனிதனுடைய வாழ்வில் சிறப்பான இடத்தை அரிசி பெற்றிருக்கின்றது என்றே கூறலாம். அத்தகைய அரிசியின் ரகங்களைப் பற்றியும், அவை தரும் பலன்களையும் இக்கட்டுரையில் காணலாம். அரிசியின் வகைகளும், பலன்களும்: கருப்பு கவுணி அரிசி – இது மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. இதைச் சாப்பிட்டால் புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். மாப்பிள்ளை சம்பா அரிசி - இதைச் சாப்பிட்டால் நரம்பு, உடல் வலுவாகும். பூங்கார் அரிசி - இதைச் சாப்பிட்டால் பெண்களுக்குச் சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். காட்டுயானம் அரிசி - இதைச் சாப்பிட்டால் நீரிழிவு, மலச்சிக்கல், புற்றுநோய் போன்றவை சரியாகும். கருத்தக்கார் அரிசி - இதைச் சாப்பிட்டால் மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். காலாநமக் அரிசி - இது புத்தர் சாப்பிட்ட அரிசி. இதைச் சாப்பிட்டால் மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் போன்றவை சரியாகும். மூங்கில் அரிசி – இதைச் சாப்பிட்டால் மூட்டு வலி, முழங்கால் வலி போன்றவை சரியாகும். அறுபதாம் குறுவை அரிசி - இதைச் சாப்பிட்டால் எலும்பு சரியாகும். இலுப்பைப் பூசம்பார் அரிசி – பக்கவாதத்திற்கு நல்லது. இதைச் சாப்பிட்டால் கால்வலி சரியாகும். தங்கச்சம்பா அரிசி - இதைச் சாப்பிட்டால் பல், இதயம் வலுவாகும். கருங்குறுவை அரிசி - இதைச் சாப்பிட்டால் இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். கருடன் சம்பா அரிசி - இதைச் சாப்பிட்டால் இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். கார் அரிசி - இதைச் சாப்பிட்டால் தோல் நோய் சரியாகும். குடைவாழை அரிசி - இதைச் சாப்பிட்டால் குடல் சுத்தமாகும். கிச்சிலி சம்பா அரிசி - இதைச் சாப்பிட்டால் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து அதிகம் கிடைக்கும். நீலம் சம்பா அரிசி - இதைச் சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கும். சீரகச் சம்பா அரிசி - இதைச் சாப்பிட்டால் எதிர்ப்புச் சக்தி கூடும். அழகு தரும். தூய மல்லி அரிசி - இதைச் சாப்பிட்டால் உள் உறுப்புகள் வலுவாகும். குழியடிச்சான் அரிசி - இதைச் சாப்பிட்டால் தாய்ப்பால் ஊறும். சேலம் சன்னா அரிசி - இதைச் சாப்பிட்டால் தசை, நரம்பு, எலும்பு வலுவாகும். பிசினி அரிசி - இதைச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய், இடுப்புவலி சரியாகும். சூரக்குறுவை அரிசி - இதைச் சாப்பிட்டால் பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். வாலான் சம்பா அரிசி - இதைச் சாப்பிட்டால் பெண்களுக்குச் சுகப்பிரசவம் ஆகும். அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். வாடன் சம்பா அரிசி - இதைச் சாப்பிட்டால் அமைதியான தூக்கம் வரும். திணை - இதைச் சாப்பிட்டால் உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். வலிமையைப் பெருக்கும். உடலை வலுவாக்கும். வரகு - இதைச் சாப்பிட்டால் உடல் பருமனைக் குறைக்கும். மலச்சிக்கலைத் தடுக்கும். சர்க்கரையின் அளவை குறைக்கும். சாமை - இதைச் சாப்பிட்டால் காய்ச்சலினால் ஏற்படும் வறட்சியைப் போக்கும். ஆண்மைக் குறைவை நீக்கும். மேலும் வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும். குதிரைவாலி - இதைச் சாப்பிட்டால் தசைகள், எலும்புகள் வலுவாகும். ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைப் போக்கும். கைகுத்தல் - இதைச் சாப்பிட்டு வருவதன் மூலம் உடலிற்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. புற்று நோய் வராமல் தடுக்கின்றது. சிறுநீரக கல் வராமல் தடுக்கின்றது மற்றும் உடல் எடையினை குறைக்க உதவுகின்றது. சிவப்பு காட்டு அரிசி - இது இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். சிவப்பு அரிசி - இது கனிம(தாது) சத்துக்கள், கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றது. குள்ளகாற் அரிசி - இந்த அரிசியால் இரத்தம், உடல் சுத்தமாகும் மற்றும் தோல் நோய் குணமாகும். முடிவுரை: அரிசி தரும் பலன்களை அறிந்து சாப்பிட்டால் உடலில் ஆரோக்கியம் என்றும் நிலைபெறும். அரிசியின் வகைகளை அறிவோம். ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
|
|||||
by Lakshmi G on 01 Nov 2020 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|