LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

பரிசும் ஊக்கமும்

               மணிகண்டன் தன் பெற்றோருடன் திருச்சியில் வாழ்ந்து வந்தான் .ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான் .மிகவும் சோம்பேறி, அவன் எந்த வேலையும் விருப்பமுடன் செய்ய மாட்டான்.
அவன் பெற்றோர்களோ மணியை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வந்தார்கள்.

              மணியை நல்ல ஒழுக்கத்தோடு வளர்க்க வேண்டும் என்று நினைத்தார்.அப்பா மணியிடம் நீ அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்,காலை கடனை முடித்து விட்டு ,சிறிது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
அதன்பிறகு குளித்து விட்டு ,கடவுளை வணங்க வேண்டும். பிறகு பள்ளி பாடங்களை எடுத்து ஒரு முறை படித்து விட்டு ,காலை உணவு உண்டவுடன் பள்ளிக்கு செல்ல வேண்டும்.என்று கட்டளையிட்டார் மணியோ சரி சரி என்று கேட்டு விட்டு... அவனால் அதிகாலையில் எழுந்திருப்பது என்பது மிகவும் கடினம்.உடற்பயிற்சி செய்வதோ நினைத்து பார்க்க முடியாத விடயம்.இவ்வாறு அப்பாவின் எண்ணத்திற்கும்,மணியின் சோம்பேறி தனத்திற்கும் இடையே பெரிய போராட்டமே நடந்தது .அவன் செயலால் அப்பா தினமும் மணியை திட்டிக்கொண்டிருந்தார்.மணியும் வருத்தமுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான்.பள்ளி படிப்பிலும் மணியால் சீரான மதிப்பெண்கள் பெற முடியவில்லை.அப்பாவின் திட்டும் ,பள்ளி ஆசிரியரின் கண்டிப்பும் மணிக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்ணியது.

             என்னால் எதையும் சரியாக செய்ய முடியாது என்று நினைத்து கொண்டான் .மணி சோம்பேறி என்பதை தவிர மிகவும் நல்ல பையன் .அப்பாவிற்கும் சரி நம்ம பையன் திறமை அவ்வளவு தான் என்று சலித்து கொண்டார்.ஒரு நாள் ஊரிலிருந்து மணியின் மாமா வந்தார் .மணிக்கு மாமா என்றால் மிகவும் பிடிக்கும் .எப்பொழுது வந்தாலும் மணிக்கு பரிசு,விளையாட்டு சாமான்கள் வாங்கி வருவார்.


              மணியின் படிப்பு பற்றியும் ,சோம்பேறி தனத்தை பற்றியும் அப்பா ,மாமாவிடம் கவலையுடன் கூறி கொண்டார்.மாமா, இது ஒரு விடயமா எல்லாம் சரியாகிவிடும் என்றார்.மறுநாள் காலையில் மாமா எழுந்து மணியிடம் வந்தார் மணி நன்றாக தூங்கிகொண்டிருந்தான்.மாமா மணியின் அருகில் அமர்ந்து மணி நான் கடைத்தெருவுக்கு போகிறேன் .உனக்கு எதாவது விளையாட்டு சாமான் வாங்கலாம் என்று நினைத்து கொண்டிருக்கிறேன் ,நீயும் என் கூட வருகிறாயா ,வந்தால் விளையாட்டு சாமான் வாங்கலாம் என்று சொல்லி முடிக்கும் முன் மணி வருகிறேன் மாமா என்றான்.மாமாவுக்கு ஆச்சரியம்,எப்படி கூப்பிட்டாலும் எழுந்திருக்க மாட்டான் மணி,அப்படியிருக்க விளையாட்டு சாமான் என்றதும் துள்ளிகுதித்து எழுந்து விட்டானே!.உடனே மாமாவுக்கு ஒரு யோசனை வந்தது.சரி நான் உனக்கு ௨௦ வினாடி தருகிறேன் அதற்குள் உன் கடமைகளை முடித்து தயாராக இரு போகலாம் என்றார்.

             என்ன ஒரு ஆச்சரியம் ௨௦ வினாடிக்குள் அனைத்தையும் முடித்து விட்டு நான் தயாராக உள்ளேன் என்றான்.மாமாவுக்கு மகிழ்ச்சி.இருவரும் கடைக்கு சென்றனர்.மணிக்கு படித்த பொருளை மாமா வாங்கி தந்தார். மணியும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான்.அன்று இரவு மணியிடம் மாமா உரையாடிக் கொண்டிருந்தார்.மணி உனக்கு பிடித்த விடயம் என்ன என்று கேட்டார்.எனக்கு விளையாட்டு சாமான்கள் என்றால் மிகவும் பிடிக்கும், இனிப்பு பிடிக்கும் ,என்றான்.அதை கேட்ட மாமா சிரித்து கொண்டே அருமை என்றார்.அப்போ படிக்க பிடிக்காத?,விளையாட பிடிக்காதா?என்றார்.மணி சிரித்து கொண்டே அவ்வளவு பிடிக்காது மாமா என்றான்.

              மாமா மணியின் முதுகை வருடி கொடுத்து கொண்டே தொலைக்காட்சி பார்ப்பது ,துங்குவது என்பது ஒரு மனிதனை நல்வழி படுத்தாது நல்ல மனிதனாக வாழ நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல படிப்பு தேவை .எப்பொழுதும் நம் கடமைகளை நாம் சிறக்க செய்ய வேண்டும் மணி என்றார் மாமா.உன் வயதில் நீ நன்றாக படிக்க வேண்டும்,விளையாட வேண்டும் மற்றும் நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.மணி சிறிது நேரத்திற்கு பிறகு சரிங்க மாமா என்றான்.மாமா மகிழ்ச்சியுடன் நீ உன் அப்பா பெருமை படும்படி,ஆசிரியர் பாராட்டும் படி நடக்க வேண்டும்.உன்னால் எல்லாம் முடியும் .நீ அற்புதமான குழந்தை என்றார்.இவ்வாறு பேசிக்கொண்டே வீடு திரும்பினார்கள்.மறுநாள் காலை மாமா ஊருக்கு புறப்பட்டார்.மணி..மாமா ஒரு மாதம் கழித்து உனக்கு ஒரு பரிசு வாங்கி அனுப்புகிறேன்,அதற்குள் உன் மாற்றத்தை பார்க்கவேண்டும் என்றார்.மணி மாமாவை கட்டி தழுவி சரிங்க மாமா என்றான்.

              மணி தனக்குள் பேசிக்கொண்டான் ..மாமா சொல்லுவதை போல் நடந்தால் மாமா பரிசு வாங்கி தருவார்.நாளையிலிருந்து நான் என் கடமையை செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டான்.முதல் நாள் ,இரண்டாம் நாள் மணிக்கு தன் கடமைகளை செய்ய கடினமாக இருந்தது.அவன் முயற்ச்சியை பார்த்த அப்பவிற்க்கு மிகவும் மகிழிச்சி.மணி அப்பாவின் திட்டு இல்லாமல் பள்ளிக்குச் சென்றான்.பள்ளி படிப்பிலும் ஆர்வத்தை காட்டினான் .அதனால் நல்மதிப்பெண் பெற்றான்.ஆசிரியரும் பாராட்டினர்.மணிக்கு நம்பிக்கை பிறந்தது.இவ்வாறு நாட்கள் கடந்தன.ஒரு நாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மணிக்கு பரிசு காத்திருந்தது .ஆர்வமுடன் பரிசு பொருளை திறந்து பார்த்தான்.அவனுக்கு பிடித்த விளையாட்டு சாமானும் ,ஒரு நல்லொழுக்க சிறுகதை புத்தகமும் இருந்தது.மணிக்கு மிக்க மகிழ்ச்சி.இப்பரிசு மணியை மீண்டும் ஊக்கப்படுத்துவதை போல் இருந்தது.மணி தன் கடமையிலிருந்து தவறாமல் வெற்றி நடை போட்டான்.

by Swathi   on 17 Feb 2019  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
29-Mar-2019 07:38:31 venkadaramanujam said : Report Abuse
மேலும் பல கதைகளுக்கு தமிழில் படிக்க: Tamil Stories தமிழ் கதைகள்
 
29-Mar-2019 07:36:04 venkadaramanujam said : Report Abuse
மேலும் பல கதைகளுக்கு தமிழில் படிக்க: Tamil Stories தமிழ் கதைகள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.