ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் ,இந்திய கவுன்சில் தலைவர் வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் தலிபான்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. மனித உரிமைகளை மீறும் வகையிலான
கொலைகளை சில நாட்களாக தலிபான்கள் செய்து வருகின்றனர். உள்நாட்டுப் போரினால் அப்பாவி மக்கள் திக்கற்று நிற்கும் நிலையும் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
இம்மாதம் (ஆகஸ்ட்) கவுன்சில் தலைமையை ஏற்றுள்ள இந்தியா தன் கருத்தினை கவுன்சில் கூட்டத்தில் பதிவு செய்துள்ளது.இந்திய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் திருமூர்த்தி, "ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீவிர கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்றும், நாட்டில் நடைபெறும் வன்முறைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தி உள்ளன. பெண்கள், குழந்தைகள் சிறுபான்மையினர் ஆகியோர் மோசமான விளைவுகளை சந்தித்து வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.
இப் பாதுகாப்பு கூட்டத்தில் ஆப்கன் மக்கள் பாதுகாப்பிற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
|