LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நிபந்தனைகளற்ற மன்னிப்பு கேட்டதால் ஹெச். ராஜா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிவுக்கு வந்தது!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான  ஹெச்.ராஜா, தனது பேச்சுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் மேடை அமைத்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினர் மற்றும் ஹெச்.ராஜா ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது ஹெச்.ராஜா நீதிமன்றம் மற்றும் காவல்துறை ஆகியவை குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்தது காணொளி வாயிலாக சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

 இதையடுத்து செப்டம்பர் 17ம் தேதி நீதிமன்றம் தானாக முன்வந்து ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. அக்டோபர் 22ம் தேதிக்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்க ஹெச்.ராஜாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ், வீடு பூட்டி இருப்பதால் வழங்கப்படாமல் நீதிமன்றத்திற்கு திரும்பியது  

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  நீதிபதிகள் சிடி செல்வம், நிர்மல்குமார் அமர்வின் முன் ஹெச்.ராஜா ஆஜரானார். அவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.எஸ். தினகரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

அந்த மனுவில் மேடை அமைத்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,உணர்ச்சிவசப்பட்ட காரணத்தால் தவறான வார்த்தைகளை உபயோகப்படுத்தி விட்டதாகவும் காணொளியில் பார்த்த பின்னரே தாம் செய்த தவறு தெரிய வந்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தனது தவறுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் ஹெச்.ராஜா மீதான அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக அறிவித்தனர். முன்னதாக ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

by Mani Bharathi   on 22 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.