|
|||||
7 நிமிடங்களில் வேலை செய்யும் கேன்சர் மருந்து... |
|||||
புற்றுநோய் என்ற பெயரை கேட்டதும் அச்சப்படாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு உடல் மற்றும்ர மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி விடும். இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதன்பிறகு குணமடையவே முடியாது என்ற நிலை காணப்படுகிறது. இதற்கான மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தற்போது புற்றுநோய் சிகிச்சைக்கு அடிஸோலிசூமாப் (Atezolizumab) என்ற மருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இது வேலை செய்ய கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் உலகிலேயே முதல்முறையாக இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை (NHS) எனப்படும் பொது சுகாதார அமைப்பு புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய ஊசியை கண்டறிந்துள்ளது. இந்த ஊசியை போட்டால் 7 நிமிடங்களில் வேலை செய்ய ஆரம்பித்து விடும் எனக் கூறுகின்றனர்.
இந்த ஊசியை அங்கீகரிக்க வேண்டும் என்று MHRA எனப்படும் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் NHS விண்ணப்பித்துள்ளது. அவர்கள் ஒப்புதல் அளித்துவிட்டால் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஊசியால் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் காலம் மூன்றில் ஒரு பங்காக குறையும் எனக் கூறுகின்றனர்.
இந்த மருந்து நுரையீரல், மார்பு, கல்லீரல், சிறுநீர்ப்பை என பல்வேறு விதமான புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் என்ற பெயரை கேட்டதும் அச்சப்படாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு உடல் மற்றும்ர மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி விடும். இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதன்பிறகு குணமடையவே முடியாது என்ற நிலை காணப்படுகிறது. இதற்கான மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.தற்போது புற்றுநோய் சிகிச்சைக்கு அடிஸோலிசூமாப் (Atezolizumab) என்ற மருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இது வேலை செய்ய கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என கூறப்படுகிறது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஊசியால் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் காலம் மூன்றில் ஒரு பங்காக குறையும் எனக் கூறுகின்றனர்.
|
|||||
by Kumar on 06 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|