|
|||||
கடலூர் தியாகி அஞ்சலை அம்மாளின் பேத்தி இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி |
|||||
கடலூர் சுதந்திர போராட்ட வீராங்கனையும், தேசத்தந்தை காந்தியால் தென்னாட்டு ஜான்சிராணி என்று பாராட்டப்பட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் பேரப்பிள்ளைகள் சூரியமூர்த்தி&தாரா இவர்களின் மகன் விஜய முருகன்&உமாமகேஸ்வரியின் ஒரே மகள் ஆர்த்தி. இவர் லண்டனில் 12&ம் வகுப்பு படித்து வருகிறார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இவரது தனித்திறனாலும், சிறப்பான சேவை பணிகளாலும், செம்ஸ்போர்டு அண்டு மால்ட்டன் ஆகிய 2 கவுன்சில்களிலும் அதிக வாக்குகள் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இங்கிலாந்தின் இளம் வயது பாராளுமன்ற உறுப்பினருக்கான (UK Youth Parliment Member) தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இவர் இங்கிலாந்து பாராளுமன்ற விவாதங்களில் பங்கேற்று இளம் வயதினரின் குரலாக செயல்படுவார். இங்கிலாந்து அரசின் அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் தொடர்ச்சியாக சந்தித்து இளம் வயதினர் சம்பந்தப்பட்ட அரசாங்க கொள்கைகளை வடிவமைப்பதில் பங்களிக்க வேண்டியது இவரது முக்கிய கடமையாக உள்ளது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இங்கிலாந்தின் MChems-ford மற்றும் Maldon Council சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்த்தி தமிழ்நாட்டின் குக்கிராமமானகடலூர் மாவட்டம் சித்தாலி குப்பம் என் ஊரை பூர்வீகமாக கொண்டவர். இவரின் தேர்வு இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் குறிப்பாக கடலூருக்கும் பெருமை சேர்த்துள்ளது. இவருக்கு தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு சமூக அமைப்புகளும், பொதுநல அமைப்புகளும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அஞ்சலை அம்மாளை பற்றிய சிறு குறிப்பு
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மகாத்மா" காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் அஞ்சலை அம்மாள். 1921-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தனது குடும்பச் சொத்தாக இருந்த நிலங்களையும், வீட்டையும் விற்று இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக பணத்தை செலவு செய்தார். அப்பொழுது பாண்டிச்சேரியிலிருந்து கடலூருக்கு வந்த சுப்பிரமணிய பாரதி, இவரைப் பாராட்டிச் சென்றார். முன்னதாக 1914 வாக்கில், "பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வரவே அஞ்சுகிற காலத்தில் அஞ்சலை அம்மாள் பொதுவாழ்க்கைக்கு வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று பாரதியார் பாராட்டினார்.
கடலூர் சுதந்திர போராட்ட வீராங்கனையும், தேசத்தந்தை காந்தியால் தென்னாட்டு ஜான்சிராணி என்று பாராட்டப்பட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் பேரப்பிள்ளைகள் சூரியமூர்த்தி & தாரா இவர்களின் மகன் விஜய முருகன் & உமாமகேஸ்வரியின் ஒரே மகள் ஆர்த்தி. இவர் லண்டனில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தனித்திறனாலும், சிறப்பான சேவை பணிகளாலும், செம்ஸ்போர்டு அண்டு மால்ட்டன் ஆகிய 2 கவுன்சில்களிலும் அதிக வாக்குகள் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார். இவரது முக்கிய கடமை இங்கிலாந்தின் இளம் வயது பாராளுமன்ற உறுப்பினருக்கான (UK Youth Parliment Member) தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இவர் இங்கிலாந்து பாராளுமன்ற விவாதங்களில் பங்கேற்று இளம் வயதினரின் குரலாக செயல்படுவார். இங்கிலாந்து அரசின் அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் தொடர்ச்சியாக சந்தித்து இளம் வயதினர் சம்பந்தப்பட்ட அரசாங்க கொள்கைகளை வடிவமைப்பதில் பங்களிக்க வேண்டியது இவரது முக்கிய கடமையாக உள்ளது. இங்கிலாந்தின் Chelms-ford மற்றும் Maldon Council சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்த்தி தமிழ்நாட்டின் குக்கிராமமானகடலூர் மாவட்டம் சித்தாலி குப்பம் என் ஊரை பூர்வீகமாக கொண்டவர். இவரின் தேர்வு இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் குறிப்பாக கடலூருக்கும் பெருமை சேர்த்துள்ளது. இவருக்கு தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு சமூக அமைப்புகளும், பொதுநல அமைப்புகளும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அஞ்சலை அம்மாளை பற்றிய சிறு குறிப்பு
|
|||||
by on 22 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|