|
|||||
நெப்டியூனுக்கு அருகே பூமி போன்ற கிரகம் |
|||||
வாணியல் ஆராய்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு அடுத்த கிரகத்தை கண்டறியும் விஞ்ஞானத்தில் இறங்கியுள்ளன. சந்திரனில் விண்கலத்தை இறக்கி அங்கிருக்கும் வியப்பூட்டும் ஆச்சரியங்களை ஆராய்வதில் அறிவிக்கப்படாத போட்டி நிலவி வருகிறது. அதில் தற்போது இந்தியாவின் சார்பில் நிலவுக்கு ஏவப்பட்ட சந்திரயான் 3 புதிய சாதனை படைத்துள்ளது. உலக அளவில் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது என்றால் அதில் ஐயமில்லை.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு செயற்கை சூரியனை கண்டுபிடித்துள்ளதாக ஒரு நாடு தம்பட்டம் அடித்துக்கொண்டது. சூரியனின் அணுக்கூறுகளை ஆராயவே முடியாத போது எப்படி செயற்கை சூரியனை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நான் ஆச்சரியங்களை அள்ளி வீசும் விண்வெளி புரியாத புதிராகவே உள்ளது.
விண்வெளி ஆராய்ச்சிக்காக ஒவ்வொரு நாடும் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கிறது. கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்தபோதும் சில நேரங்களில் அந்த ஆராய்சியும், கண்டுபிடிப்பிகளும் தோல்வியில் முடிந்துவிடுகிறது. அப்படி கோடிக்கணக்கில் நஷ்டத்தை சந்தித்தாலும் ஆராய்ச்சிகள் குறைந்தபாடில்லை.
இதனிடையே புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்து அது தற்போது வைரலாகியுள்ளது.
சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கோள்கள் உள்ளன. இதில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியை போன்று உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் நெப்டியூன் கோளை தாண்டி பூமியை போன்ற புதிய கிரகத்தை ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக ஜப்பானின் கிண்டாய் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி பேட்ரிக் சோபியா லைகாகா, ஜப்பானின் தேசிய விண்வெளி கண்காணிப்பு மையத்தை சேர்ந்த தகாஷி இட்டோ ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது, "சூரிய குடும்பத்தில் நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதி கைப்பர் பட்டை என்று அழைக்கப்படுகிறது. இது பனிப்பொருட்களை கொண்ட பகுதி ஆகும். இங்குள்ள குறுங்கோள்கள் தண்ணீர், மீத்தேன், அமோனியாவால் ஆனவை.
இந்த கைப்பர் பட்டை பகுதியில் பூமி போன்ற கிரகம் உள்ளது. இது எங்களது கணிப்பு மட்டுமே. இதுதொடர்பாக மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். சூரிய குடும்பத்தில் 9-வது கிரகம் மறைந்திருக்கிறது. அந்த கிரகத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் நீண்டகாலமாக கூறி வருகின்றனர். நாங்கள் கண்டுபிடித்திருப்பது சர்வதேச விஞ்ஞானிகள் கூறி வரும் 9-வது கிரகம் கிடையாது. இது வேறு ஒரு புதிய கிரகம் என்று கருதுகிறோம். சூரிய குடும்பத்தின் எல்லையில் இந்த கிரகம் உள்ளது.
சூரியனில் இருந்து பூமி, 94 வானியல் அலகு தொலைவிலும் சூரியனில் இருந்து புதிய கிரகம் சுமார் 200 வானியல் அலகு தொலைவிலும் உள்ளது. இந்த கிரகம் குறித்த ஆய்வுகளை தீவிரப்படுத்த வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாணியல் ஆராய்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு அடுத்த கிரகத்தை கண்டறியும் விஞ்ஞானத்தில் இறங்கியுள்ளன. சந்திரனில் விண்கலத்தை இறக்கி அங்கிருக்கும் வியப்பூட்டும் ஆச்சரியங்களை ஆராய்வதில் அறிவிக்கப்படாத போட்டி நிலவி வருகிறது. அதில் தற்போது இந்தியாவின் சார்பில் நிலவுக்கு ஏவப்பட்ட சந்திரயான் 3 புதிய சாதனை படைத்துள்ளது. உலக அளவில் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது என்றால் அதில் ஐயமில்லை.இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு செயற்கை சூரியனை கண்டுபிடித்துள்ளதாக ஒரு நாடு தம்பட்டம் அடித்துக்கொண்டது. சூரியனின் அணுக்கூறுகளை ஆராயவே முடியாத போது எப்படி செயற்கை சூரியனை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நான் ஆச்சரியங்களை அள்ளி வீசும் விண்வெளி புரியாத புதிராகவே உள்ளது. விண்வெளி ஆராய்ச்சிக்காக ஒவ்வொரு நாடும் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கிறது. கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்தபோதும் சில நேரங்களில் அந்த ஆராய்சியும், கண்டுபிடிப்பிகளும் தோல்வியில் முடிந்துவிடுகிறது. அப்படி கோடிக்கணக்கில் நஷ்டத்தை சந்தித்தாலும் ஆராய்ச்சிகள் குறைந்தபாடில்லை. இதனிடையே புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்து அது தற்போது வைரலாகியுள்ளது.
இதுதொடர்பாக ஜப்பானின் கிண்டாய் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி பேட்ரிக் சோபியா லைகாகா, ஜப்பானின் தேசிய விண்வெளி கண்காணிப்பு மையத்தை சேர்ந்த தகாஷி இட்டோ ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது, "சூரிய குடும்பத்தில் நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதி கைப்பர் பட்டை என்று அழைக்கப்படுகிறது. இது பனிப்பொருட்களை கொண்ட பகுதி ஆகும். இங்குள்ள குறுங்கோள்கள் தண்ணீர், மீத்தேன், அமோனியாவால் ஆனவை.இந்த கைப்பர் பட்டை பகுதியில் பூமி போன்ற கிரகம் உள்ளது. இது எங்களது கணிப்பு மட்டுமே. இதுதொடர்பாக மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். குடும்பத்தில் 9-வது கிரகம் மறைந்திருக்கிறது. அந்த கிரகத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் நீண்டகாலமாக கூறி வருகின்றனர். நாங்கள் கண்டுபிடித்திருப்பது சர்வதேச விஞ்ஞானிகள் கூறி வரும் 9-வது கிரகம் கிடையாது. இது வேறு ஒரு புதிய கிரகம் என்று கருதுகிறோம். சூரிய குடும்பத்தின் எல்லையில் இந்த கிரகம் உள்ளது. சூரியனில் இருந்து பூமி, 94 வானியல் அலகு தொலைவிலும் சூரியனில் இருந்து புதிய கிரகம் சுமார் 200 வானியல் அலகு தொலைவிலும் உள்ளது. இந்த கிரகம் குறித்த ஆய்வுகளை தீவிரப்படுத்த வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
|||||
by Kumar on 07 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|