|
|||||
உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை நிறுவனர்- தமிழுக்காகவே வாழும் முனைவர் 'ஈழம்' தமிழப்பனார்! |
|||||
தமிழில் வெளிவந்த பல அரியவகைப் புத்தகங்களை நாம் காப்பாற்ற மறந்துவிட்டாலும், அதனைக் காப்பாற்றி, தமிழுக்காகவே வாழ்பவர், 84 வயதாகும் முனைவர் 'ஈழம்' தமிழப்பனார். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பட்டமான எம்.பில் பெற்றதோடு, 'எண்ணும் எழுத்தும்' என்கிற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து முனைவர் (டாக்டர் ) பட்டம் பெற்று உள்ளார். அவரது வீட்டிலுள்ள சின்னச்சின்ன அறைகள் முழுவதும் மூட்டை மூட்டையாகப் புத்தகங்கள். "எனக்கு, சிறு வயதிலிருந்து தமிழ்மீது மிகுந்த ஆர்வம் உண்டு. அப்போதே, எங்கள் ஊரான தேவகோட்டையில் சிறிய நூலகம் ஒன்றை அமைத்து, அதில் 'காலணா' காசுக்கு புத்தகங்கள் வாடகைக்குப் படிக்கக் கொடுப்பேன். பிறகு, தமிழில் 'முனைவர்' பட்டம் பெறும்வரை பயின்றேன். சென்னையில், ஒரு குழு அமைப்பில் நான் பணியாற்றிய போதுதான், திருக்குறளின் தொகுப்பு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழில் இதுவரை வெளிவந்த அனைத்து நூல்களையும் ஒன்றாகத் திரட்டி அதை உலகிற்குத் தர வேண்டும் என்ற ஆசையில் தான், 'உலகத் தமிழ் நூலகம்' அறக்கட்டளை (world Tamil library trust) ஒன்றை நிறுவி இருக்கிறோம். தமிழில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து நூல்களும் உள்ளன." இவ்வாறு ஈழம் தமிழப்பனார் கூறினார். மாறிவரும் உலகில் மாறாமல், அன்று போல் இன்றும் புத்தகம் சேகரிக்கும் ஈழம் தமிழப்பனார் பாராட்டிற்கு உரியவரே! |
|||||
by Mani Bharathi on 11 Dec 2018 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|