சவுதி அரேபியாவில் நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசு நிதாகத் என்ற புதிய சட்டத்தை அறிமுகம் செய்தது, இந்த சட்ட படி அரேபிய நிறுவனங்கள், உள்நாட்டு மக்கள் 10 சதவீதம் பேரை கட்டாயம் தங்களுடைய நிறுவனத்தில் பணி அமர்த்த வேண்டும். இதனால் தற்போது சவுதி அரேபிய நிறுவனங்களில் பணியாற்றிவரும் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ள காரணத்தால், முதற்கட்டமாக சுமார் 60 ஆயிரம் இந்தியர்கள் வேலையிழந்து, தாயகம் திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.இந்நிலையில், வேலை இழந்த இந்திய தொழிலாளர்கள் தாயகம் திரும்ப வசதியாக அவர்களின் ஆவணங்களை சரிபார்த்து அவசர சான்றிதழ் அளிக்கும் பணியை இந்திய தூதரகம் தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக வேலையிழந்த 12,000 தொழிலாளர்கள், தாயகம் திரும்புவதற்கு அவசர சான்றிதழ் கேட்டு ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.இதேபோல், சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் 3,000 தொழிலாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி, போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
|