LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வளைகுடா நாடுகள்

ஈரான் செல்வதற்கு, இந்தியர்களுக்கு இனி விசா தேவையில்லை!

இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா நடைமுறை இல்லாத வரவேற்பை, வளைகுடா தேசங்களில் ஒன்றான ஈரான் விடுத்துள்ளது.

 

ஈரானுக்குச் செல்லத் திட்டமிடும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத கொள்கையை ஈரான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், அது சார்ந்த நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விளக்கி உள்ளது. இதன்படி சுற்றுலா நோக்கங்களுக்கான இந்தியர்களின் விசா இல்லாத நுழைவு, பிப்ரவரி 4 முதல் அமலுக்கு வந்துள்ளது.

 

சுற்றுலாவுக்கு மட்டுமே பொருந்தும் 

 

இவ்வாறு விசா இன்றி ஈரானுக்குள் செல்லும் இந்தியர்கள் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை அங்கே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதாவது சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள், 6 மாதங்களுக்கு ஒரு முறை இவ்வாறு விசா இன்றி ஈரானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இந்தச் சலுகையின் கீழான சுற்றுலாவாசிகளுக்கு ,15 நாட்களுக்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.

 

சுற்றுலா நோக்கங்களுக்காக ஈரானுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது வணிகம், மருத்துவம் அல்லது கல்வி நோக்கங்களுக்காக ஈரானுக்குச் செல்ல வேண்டிய இந்தியர்கள் அந்தந்த பிரிவுகளின் கீழ் சாவிற்கு விண்ணப்பித்தாக வேண்டும்.

 

அதே போன்று சுற்றுலா நிமித்தம் ஈரானுக்குப் பயணப்படும் இந்தியர்கள், ஆறு மாதக் காலக்கெடுவுக்குள் மீண்டும் பயணிக்க வேண்டியிருப்பின், முறைப்படி விசா பெற விண்ணப்பம் செய்தாக வேண்டும். மேலும் விமானம் மார்க்கமாக ஈரானுக்குச் செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே இந்த விசா இல்லாத கொள்கை பொருந்தும். அதாவது, துருக்கி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் வாயிலாகச் சாலை மார்க்கம் ஈரானுக்கு வருவோர் விசாவை முன்கூட்டியே பெறுவது அவசியமாகிறது.

 

ஈரான் தூதரகம் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

by Kumar   on 09 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது. பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது.
75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு. 75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு.
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.