LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 4 நீதிபதிகள் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.

முக்தி தரும் நகரங்கள் ஏழில் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சுகாதார ஏற்பாடுகள் குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா (செங்கல்பட்டு), காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கருணாநிதி, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்த் முரளிகிருஷ்ணா ஆகியோர்  ஆய்வு செய்தனர்.

பக்தர்களுக்கு குடிநீர் முறையாக வழங்கப்படுகிறதா, பக்தர்களுக்கான கழிப்பறை சரியாக உள்ளதா, சிசிடிவி கேமராக்கள் இயங்குகிறதா, பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

அர்ச்சனைக் கட்டணம் குறிப்பிட்டுள்ள அளவுக்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறதா, வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தெரிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளனவா என்றும் ஆய்வு நடத்தினர்.

உண்டியல் வருமானம் எவ்வாறு கணக்கெடுக்கப்படுகிறது, காணிக்கைகள் முறையாக வரவு வைக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தனர்.  அதுமட்டுமின்றி கோயிலுக்கு வந்த பக்தர்களிடமும் நேரடியாக குறைகளைக் கேட்டறிந்தனர்.

by Mani Bharathi   on 18 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.