ஆஸ்திரேலியவில் ஆளும் தொழிலாளர் கட்சி தலைவருக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 12 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னால் பிரதமர் கெவின் ருத், ஜூலியா கிலார்டை தோற்கடித்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமராக பதவி வகித்து வந்த ஜூலியா கிலார்டு, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கெவின் ருத் நேற்று இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய பிரதமராக பொறுப்பேற்றார். வரும் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் பொது தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
|