அன்னைக்கு ஒண்ணத்தவிர எல்லாம் வழக்கம்போல நடந்திச்சு. சேவக்கோழி கூவிச்சு, காக்க கத்திச்சு. சூரியன் கெழக்கு ஊதிச்சுது. பறவை எல்லாம் எற தேடப் போச்சு.
மெய்யப்பன் கண்ணு முழிச்சான். பெரிசா கொட்டாவி விட்டான். கண்களைதக் தொடக்கிறதுக்காக கையைத் தூக்கினான். அப்பத்தான் அவனுக்கு விஷயம் புரிஞ்சுது.
அவனோட ரெண்டு கையிலும் இருக்கிறத வெரலுக அசையறதேயில்லை. கையை ஆட்டிப் பார்த்தான் சொடக்குப் போடலாம்ணு வெரலுக வளச்சுப் பார்த்தான் ம்ஹூம் அசையவேயில்லை.
மெய்யப்பனோட மனதிலே கவல வந்து ஒட்டிக்கிச்சு. இனி நான் என்ன பண்ணுவேன் எப்படி வேலை செய்வேன். எப்படி சாப்பிடுவேன்ண்ணு புலம்பத் தொடங்கினான். அவனுக்கு அழுகையே வந்திச்சு. கடவுளே நான் என்ன செய்வேன். எனக்கு ஏன் இப்படியாச்சு அப்படீண்ணு அழத்தொடங்கினான்.
பெரியவங்க யாருகிட்டயாவது கேட்கலாமா/ இல்லே வைத்தியர் கிட்ட போறதா? இல்லே கோயிலுக்குப் போய் வேண்டிக்கிறதா? அப்படீண்ணு யோசிச்சிட்டிருந்தப்போ..."நான் தான் பெரியவன் எனக்கு முன்னாலே நீங்க எல்லாம்தூசு அப்படீண்ணு யாரோ பேசறச் சத்தம் கேட்டது.
யாரது இப்படிப் பேசறதுண்ணு காதுகளை கூர்மையா வச்சிகிட்டான் மெய்யப்பன். அப்பத்தான் தெரிஞ்சுது. பேசறது வேறுயாருமில்லே. அவனோட வெரலுதாங்கிறது.
நான்தான் பெரியவன். நான் இல்லாட்டி உங்களால ஒரு வேலையும் செய்ய முடியாது ஒரு பொருளை எடுக்கவோ தூக்கவோ முடியாது. வெற்றியைக் காட்டணும்னாலும் நான் வேணும். நான்தான் பெரியவன் அப்படீண்ணு பெருவிரல் வீம்பா பேசுச்சு.
அதக்கேட்ட ஆள்காட்டி வெரலு. ரொம்பத்தான் பீத்திக்காதே. யாரையாவது மெரட்டும்ணா நான் வேணும். யாரையாவது சுட்டிக்காட்டணும்ணா நான் வேணும் நான் தான் பெரியவன் அப்படீண்ணு ஆள்காட்டி வெரலு சொல்லுச்சு.
ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா. ஒரு கையிலே பெரியவன் நான் தான். இது கொழந்தைக்குக்கூடத் தெரியும். எனக்கு முன்னாலே நீங்க எல்லாம் ஜூஜூபி அப்படீண்ணு தம்பட்டம் அச்சுது நடுவெரலு.
கொஞ்சம் நான் பேசறதே கேட்கறீங்களா. இந்த உலகத்திலேயே ரொம்ப முக்கியமானது உறவுதான். கல்யாணத்தினாலதான் புது உறவுகள் உண்டாகுது. கல்யாணமாச்சுங்கறதுக்கு அடயாளமா மோதிரம் போடுவாங்கண்ணு தெரியுமில்ல. அத எனக்குக் தான் போடுவாங்க. அப்படின்னு கொஞ்சும் குரல்ல அழகாகச் சொல்லிச்சு மோதிரவெரலு.
அடுத்தது சுண்டு வெரலு பேசணும். ஆனா அது பேசத் தொடங்குறதுக்கு முன்னாடியே மத்த நான்கு விரல்களும் எளக்காரமாச் சிரிக்கத் தொடங்கிச்சுக. இவன் பொடிப்பையன். பேரெ பாரேன் சுண்டு வெரலு. சுண்டைக்காயும் சின்னது. சுண்டுவெரலும் சின்னது. அவனப் பாக்கவே பரிதாபமா இருக்கு அப்படீண்ணு மத்த நான்கு வெரலுகளும் சேந்திகிட்டு சிரிக்க ஆரம்பிச்சுதுக.
ஆனா சுண்டு வெரலு அதைப் பத்தியெல்லாம் கவலையே படல. அது மெதுவா ஓரேயொரு விஷயத்தை மட்டும் சொல்லுச்சு அடங்கிப் போச்சுக. அப்படி அந்தச் சுண்டு வெரலு என்ன பேசிச்சுண்ணு தெரியுமா?
சாமி கும்பிடும்போது நான்தான் சாமிக்குப் பக்கத்திலெ ரொம்ப நெருக்கமா இருக்கறவன்ணு சொல்லிச்சு. உருவு கண்டு எள்ளாமை வேண்டும். அதாவது ஒருவரோட தோற்றத்தைப் பாத்து கேலி செய்யக்கூடாதுண்ணு பெரியவங்க சொல்லறது எவ்வளவு சரியாக இருக்கு.
|