LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

துள்ளி விளையாடிய வெள்ளை முயல்.

வெள்ளை முயலுக்கு தன்னோட கண்களை நம்ப முடிய வில்லை..

 

பச்சைப்பட்டு விரிச்சமாதிரி புல்லு வளர்ந்திருக்கிறது. ஒரு மாசத்துக்கான தீனியானது. இந்த முதுமலைக்காட்டில்  இப்படியொரு இடம் இருக்கிறது யாருக்கும் தெரிய வில்லை  போலிருக்கே...

 

வெள்ளை முயலுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது, அது அந்தப் புல் மெத்தயில் கும்மாளம் போடத் தொடங்கியது. உருண்டது, புரண்டது. எம்பி எம்பிக் குதித்தது. கொஞ்சம் புல்லைக் கடிச்சு தின்றது. மறுபடியும் கும்மாளம் போடத் தொடங்கியது.

 

ஒரு முறை அப்படிக் குதித்தப்போது ஒரு புல்லோட நுனி அதோடு கால்லில் குத்தியது. அதுவும் நல்லா குத்தயிருந்தது. நல்ல வலி ..காலி வேற இரத்தம் வந்திருந்தது

 

என் காலில் இரத்தம் வறுவதற்கு இந்தப் புல்லுதான் காரணம் இதை சும்மா விடக்கூடாது. என்ற்று நேரா தீ இடம் போனது.

 

"தீயே தீயே நான் விளையாடும் போது என் காலில் குத்தின புல்லை எரிச்சிடு... " என்று கேட்டது.

 

"நீ என்ன செய்தாய் என்று முதலில் சொல்" என்றது தீ. வெள்ள முயலல் நடந்ததெல்லாம் சொல்லியது.

 

"எம்பி எம்பிக் குதித்து  புல்லு மேலே விழுந்தால் புல்லு குத்தாமல் என்ன செய்யும். தப்பு பண்ணினவன் நீதான். அதனல் நான் புல்லை  எரிக்கமாட்டேன்" என்றது தீ.

 

வெள்ள முயலுக்குத் தீ மேல் கோபம் கோபமா வந்தது. உன்னை என்ன செய்யுறேன் பார் தண்ணீரிடம் போனது.

 

"தண்ணீ தண்ணீ நான் விளையாடும் போது என் காலில் குத்தின புல்லை எரிக்காத தீயை அணைத்து விடு" என்றது முயல்.

 

"என்ன நடந்தது விவரமாக  சொல் என்றது தண்ணீ.. முயல் நடந்ததை சொல்லியது.

 

"அப்ப நீதான் தப்புப்பண்ணினவன். புல்லு மேலே எம்பிக் குதிச்சதனாலே புல்லு காலில் குத்தியது. பாவம் புல்ல ஏன் எரிக்கணும். அப்படி எரிக்காததுக்கு தீயை நான் ஏன் அணைக்கணும் "என்றது தண்ணீ.

 

முயலுக்குத் தண்ணீர் மேலேயும் கோபம் வந்தது. அது நேரா யாருகிட்ட போயிருக்கும்ணு நினைக்கிறீங்க.. மண்வெட்டி கிட்டே போனது.

 

"மண்வெட்டி மண்வெட்டி. நா விளையாடும் போது என் காலில்  குத்தின புல்,ஏரிக்காத தீயை அணைக்காத தண்ணீரை வெட்டிவிடு" என்று கேட்டது.

 

மண்வெட்டியும் என்ன நடந்தது என்று கேட்டது.

 

புல்லில் விளையாடினதும், காலில் புல்லு குத்தினதும், புல்ல எரிக்கச் சொல்லித் தீ கிட்ட போனதும். தீ மாட்டேண்ணு சொன்னதும். தீ அணைக்கச் சொல்லி தண்ணீர்கிட்ட போனது வரைக்கும் முயல் சொல்லியது.

 

அதயெல்லாம் கேட்ட மண்வெட்¥டி தீயும் ,தண்ணியும் சொன்னதுதான் சரி. அதை தான் நானும் சொல்லப் போறேன். நான் தண்ணீரை வெட்டிவிட மாட்டேண்ணு மண்வெட்டி சொல்லியது.

முயலுக்குக் கோபமோ கோபம். இரு உன்னை ஒரு வழி பண்றேண்ணு சொல்லி நேரா கொல்லர் கிட்டே போனது.

 

"கொல்லரே கொல்லரே... நான் விளையாடும் போது என் காலில் புல்ல எரிக்காத தீயை அணைக்காத தண்ணீரை ,வெட்டிவிடாதா மண்வெட்டியோட வாயை மழுங்கடிச்சிருங்க" என்றது முயல்

 

முயலும் நடந்ததையெல்லாம் சொல்லியது.

 

அதையெல்லாம் கேட்ட கொல்லரும் "ஆமா அவங்க சொல்றதுதான் சரி. நான் மண்வெட்டியோட வாயை மழுங்கடிக்க மாட்டேன்ணாரு.

 

வெள்ள முயலுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இப்ப அது யாருக்கிட்ட போயிருக்கும்னு யோசிங்க. அப்படி போனா அவருகிட்ட எப்படி சொல்லியிருக்குணும் நீங்களும் சொல்லிப் பாருங்க. சரியா?

by Swathi   on 11 Mar 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
26-May-2018 09:51:37 dharani said : Report Abuse
நைஸ் வெரி ஸ்வீட் நா ரெம்ப ஹாப்பி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.