LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

லிபியாவில் புயல், மழையால் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

 

மொரோக்காவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 3,000 பேர் வரை பலியாகினர், 10000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். ஒட்டுமொத்த உலகமும் மொரோக்காவின் பேரழிவில் அதிர்ந்து போயிருந்தது.
**************
இந்நிலையில் லிபியாவில் புயல், மழையால் 10,000-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். டேனியல் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த 10-ம் தேதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக லிபியாவில் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது.
**************************** 
டேனியல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை 2 அணைகளை துவம்சம் செய்தது. இந்த அணைகள் உடைந்த போது பெருவெள்ளமானது சுனாமி எனும் ஆழிப்பேரலையை விட பல மடங்கு அதிவேகமாக நகரங்களை காவு கொண்டது. இந்த பெருவெள்ளத்தில் சிக்கிய டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் நகரங்கள் அடையாளமே தெரியாமல் அழிந்து போயின.
***********************
லிபியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கிய இந்த பெருவெள்ளத்தில் சிக்கி மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 6,000. மேலும் 10,000 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. பெருவெள்ள ஆறானது மனிதர்களை அப்படியே வாரி சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் வீசியதாம். இதனால் டெர்னா நகரை ஒட்டிய கடலுக்குள் தேடும் இடமெல்லாம் மனித உடல்களாக சிதறி கிடக்கின்றன என அதிருகின்றனர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்.
****************************
லிபியாவில் அரசியல் குழப்பம் தொடர்ந்து போட்டி அரசாங்கங்கள் நடைபெறுகின்றன. இதனால் லிபியா மீட்பு பணியில் சர்வதேச நாடுகளின் உதவிகள் சென்றடைவதில் சிக்கல் தொடருகிறது.
******************** 
மேலும் லிபியாவில் ஐநா சபை, செஞ்சிலுவை சங்கம் ஆகியவை மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடுகின்றன; ஆனால் வெளிநாடுகளில் இருந்து மீட்பு பணிக்கு பல்லாயிரக்கணக்கானோர் வருவதன் மூலமே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முழுமை அடையச் செய்ய முடியும் என்கிற ஆதங்கத்தையும் தன்னார்வலர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
*************************
இதனிடையே டெர்னா நகர மேயர் Abdulmenam al-Ghaithi டிவி பேட்டி ஒன்றில், லிபியா பெருவெள்ளத்தில் மொத்தம் 18,000 பேர் முதல் 20,000 பேர் வரை பலியாகி இருக்கக் கூடும் என அச்சப்படுவதாக கூறியிருப்பது உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மொரோக்காவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 3,000 பேர் வரை பலியாகினர், 10000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். ஒட்டுமொத்த உலகமும் மொரோக்காவின் பேரழிவில் அதிர்ந்து போயிருந்தது.


இந்நிலையில் லிபியாவில் புயல், மழையால் 10,000-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். டேனியல் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த 10-ம் தேதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக லிபியாவில் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது.

சுனாமியை விட பல மடங்கு

டேனியல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை 2 அணைகளை துவம்சம் செய்தது. இந்த அணைகள் உடைந்த போது பெருவெள்ளமானது சுனாமி எனும் ஆழிப்பேரலையை விட பல மடங்கு அதிவேகமாக நகரங்களை காவு கொண்டது. இந்த பெருவெள்ளத்தில் சிக்கிய டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் நகரங்கள் அடையாளமே தெரியாமல் அழிந்து போயின.

லிபியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கிய இந்த பெருவெள்ளத்தில் சிக்கி மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 6,000. மேலும் 10,000 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. பெருவெள்ள ஆறானது மனிதர்களை அப்படியே வாரி சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் வீசியதாம். இதனால் டெர்னா நகரை ஒட்டிய கடலுக்குள் தேடும் இடமெல்லாம் மனித உடல்களாக சிதறி கிடக்கின்றன என அதிருகின்றனர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்.

மீட்பு பணியில் சிக்கல்

லிபியாவில் அரசியல் குழப்பம் தொடர்ந்து போட்டி அரசாங்கங்கள் நடைபெறுகின்றன. இதனால் லிபியா மீட்பு பணியில் சர்வதேச நாடுகளின் உதவிகள் சென்றடைவதில் சிக்கல் தொடருகிறது.

 மேலும் லிபியாவில் ஐநா சபை, செஞ்சிலுவை சங்கம் ஆகியவை மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடுகின்றன; ஆனால் வெளிநாடுகளில் இருந்து மீட்பு பணிக்கு பல்லாயிரக்கணக்கானோர் வருவதன் மூலமே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முழுமை அடையச் செய்ய முடியும் என்கிற ஆதங்கத்தையும் தன்னார்வலர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே டெர்னா நகர மேயர் Abdulmenam al-Ghaithi டிவி பேட்டி ஒன்றில், லிபியா பெருவெள்ளத்தில் மொத்தம் 18,000 பேர் முதல் 20,000 பேர் வரை பலியாகி இருக்கக் கூடும் என அச்சப்படுவதாக கூறியிருப்பது உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

by Kumar   on 14 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.