|
||||||||
மாண்பிழக்கும் தமிழினம் |
||||||||
தமிழ் உயிர் என்பார் அரைகுறை கற்றோர் தமிழ் சோறு போடுமா? மெத்தப் படித்த பஞ்சோந்திகள் பணத்திற்காகப் பெற்ற தாயைக் கொல்லும் பாதகர்கள்…….!
தமிழ்ப்படிப்போர் மூடர் என்போர் தமிழ்த் துரோகிகள் தமிழ் மாண்பையும் மரபுகளையும் அழிக்கும் எத்தர்கள் இவர்கள் கால்பதியும் பூமி வெந்து போகும் கொடியோர் விடும் மூச்சுக்காற்று மனித இனத்தை அழிந்தே தீரும்………..!
மொழியைத் தொலைத்தவன் இனத்தை அழித்தவன் தமிழனைக் குழிதோண்டிப் புதைத்தவன் இவன் படையில் தமிழ்த் தலைவர்கள் தொலை நோக்குப் பேராசிரியர்கள் செல்வச்சீமான்கள்………. உலகை உருமாற்றம் செய்யும் சிற்பிகள் என்ன புகழ் பெற்றாலும் பெற்ற தாயை மறக்கும் மட்டிகள் வேரை மறப்பது கேடுகெட்ட தமிழ் இனம் சிதைவது கருவின் குற்றமா?
கொடிகட்டி வாழ்ந்த தமிழனுக்கு இயற்கை விட்ட சாபமா? யார் சொன்னாலும் கேட்க மறுக்கும் மண்டை கனமா அடங்கா திமிரா? நாள்கள் எண்ணப்படுவதை உணரா களிமண்களா?
தமிழ்க்காவலர்களே………! துணிந்து சொல்லுங்கள்
தறிகெட்டு திரிந்து தமிழைத்திட்டமிட்டு அழிக்கும் தறுதலைகளுக்குச் செவினியறைக் கொடுக்கலாமா? கொத்துக் குண்டுகளால் துளைக்கலாமா?
தமிழ்க்காவலர்களே……..! உலகின் வழிகாட்டிகளே நல்ல முடிவுகள் பிறந்திட வேண்டும் செம்மொழி செழுமையுறத் திடமான முடிவுகள் இன்றே முன்னெடுக்க வேண்டும்……!
தமிழர்கள் இணைய வேண்டும் தமிழும் தமிழரினமும் உரிமையுடன் குறையின்றி வாழ வேண்டும் தமிழ் விந்துக்குப் பிறந்த அனைவரும் சிந்திக்க வேண்டும்……..! - வே.ம.அருச்சுணன் – மலேசியா |
||||||||
by Swathi on 01 May 2014 2 Comments | ||||||||
Tags: TamilInam தமிழ் இனம் | ||||||||
|
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|