|
|||||
ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.3.80 கோடி ஊக்கத்தொகை |
|||||
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 111 பதக்கங்களைப் பெற்று இந்தியா 5-வது இடம் பிடித்துள்ளது. 214 தங்கம், 167 வெள்ளி, 140 வெண்கலம் என 521 பதக்கங்களுடன் சீனா முதலிடம் பிடித்துள்ளது. 44 தங்கம், 46 வெள்ளி, 41 வெண்கலம் என 131 பதக்கங்களுடன் ஈரான் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 42 தங்கம், 49 வெள்ளி, 59 வெண்கலம் என 150 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. 30 தங்கம், 33 வெள்ளி, 40 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் கொரியா நான்கம் இடம் பிடித்துள்ளது. 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என 111 பதக்கங்களுடன் இந்தியா ஐந்தாம் இடம் பிடித்துள்ளது.
**************************************
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நிறைந்த சர்வதேச போட்டிகளில் 111 பதக்கங்களை இந்தியா வென்றது இதுவே முதல்முறை. கடந்த 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில்கூட இந்தியா 101 பதக்கங்கள் மட்டுமே வென்றது. 2010-ம் ஆண்டு சீனாவின் கான்சோ நகரில் நடைபெற்ற முதல் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம் உள்பட 14 பதக்கங்களை மட்டுமே பெற்று 15வது இடம் பிடித்தது. ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இதற்கு முன் கடந்த 2018-ம் ஆண்டு 15 தங்கம் உள்பட 72 பதக்கங்களை வென்றதே அதிகபட்ச பதக்க வேட்டையாக இருந்தது.
*************************************
வரலாறு படைத்துள்ளது இந்தியா
***********************************
"இம்முறை வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாரா விளையாட்டு வீரர்கள் நமது நாட்டை பெருமை கொள்ள வைத்திருக்கிறார்கள். டோக்கியோ பாராலிம்பிக்கில் வென்றதை விட அதிக பதக்கங்களை பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் வெல்வோம். 111 பதக்கங்களை வென்றது எங்களுக்கு ஆச்சரியம் அல்ல. 110-115 பதக்கங்களை வெல்ல முடியும் என நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். தற்போது 111 என்ற ராசியான எண் கொண்ட பதக்கங்களை வென்றுள்ளோம்" என பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் தீபா மாலிக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
*********************************
ரூ.3.80 கோடி ஊக்கத்தொகையை
************************************
சீனா நாட்டின் ஹாங்சூவில் கடந்த அக்.22 முதல் 28-ம் தேதி வரை ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் இந்திய அணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த 18 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்களில் 7 பேர் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றனர்.
*******************************
பதக்கங்களைப் பெற்ற வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக, ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு சென்னை முகாம் அலுவலகத்தில் நவ.3 2023-ம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பதக்கங்களை வென்ற 7 பேருக்கு ரூ.3.80 கோடியை ஊக்கத்தொகையாக வழங்கினார். மேலும், இந்தப் போட்டிகளில் பங்கேற்ற இதர 11 பேருக்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.22 லட்சத்துக்கான காசோலைகளையும் வழங்கி வாழ்த்தினார்.
*******************************
முன்னதாக ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 7 பேருக்கும், பயிற்றுநர்களுக்கும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 111 பதக்கங்களைப் பெற்று இந்தியா 5-வது இடம் பிடித்துள்ளது. 214 தங்கம், 167 வெள்ளி, 140 வெண்கலம் என 521 பதக்கங்களுடன் சீனா முதலிடம் பிடித்துள்ளது. 44 தங்கம், 46 வெள்ளி, 41 வெண்கலம் என 131 பதக்கங்களுடன் ஈரான் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 42 தங்கம், 49 வெள்ளி, 59 வெண்கலம் என 150 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. 30 தங்கம், 33 வெள்ளி, 40 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் கொரியா நான்கம் இடம் பிடித்துள்ளது. 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என 111 பதக்கங்களுடன் இந்தியா ஐந்தாம் இடம் பிடித்துள்ளது. ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நிறைந்த சர்வதேச போட்டிகளில் 111 பதக்கங்களை இந்தியா வென்றது இதுவே முதல்முறை. கடந்த 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில்கூட இந்தியா 101 பதக்கங்கள் மட்டுமே வென்றது. 2010-ம் ஆண்டு சீனாவின் கான்சோ நகரில் நடைபெற்ற முதல் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம் உள்பட 14 பதக்கங்களை மட்டுமே பெற்று 15வது இடம் பிடித்தது. ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இதற்கு முன் கடந்த 2018-ம் ஆண்டு 15 தங்கம் உள்பட 72 பதக்கங்களை வென்றதே அதிகபட்ச பதக்க வேட்டையாக இருந்தது. வரலாறு படைத்துள்ளது இந்தியா "இம்முறை வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாரா விளையாட்டு வீரர்கள் நமது நாட்டை பெருமை கொள்ள வைத்திருக்கிறார்கள். டோக்கியோ பாராலிம்பிக்கில் வென்றதை விட அதிக பதக்கங்களை பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் வெல்வோம். 111 பதக்கங்களை வென்றது எங்களுக்கு ஆச்சரியம் அல்ல. 110-115 பதக்கங்களை வெல்ல முடியும் என நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். தற்போது 111 என்ற ராசியான எண் கொண்ட பதக்கங்களை வென்றுள்ளோம்" என பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் தீபா மாலிக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரூ.3.80 கோடி ஊக்கத்தொகை சீனா நாட்டின் ஹாங்சூவில் கடந்த அக்.22 முதல் 28-ம் தேதி வரை ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் இந்திய அணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த 18 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்களில் 7 பேர் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றனர். பதக்கங்களைப் பெற்ற வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக, ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு சென்னை முகாம் அலுவலகத்தில் நவ.3 2023-ம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பதக்கங்களை வென்ற 7 பேருக்கு ரூ.3.80 கோடியை ஊக்கத்தொகையாக வழங்கினார். மேலும், இந்தப் போட்டிகளில் பங்கேற்ற இதர 11 பேருக்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.22 லட்சத்துக்கான காசோலைகளையும் வழங்கி வாழ்த்தினார். முன்னதாக ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 7 பேருக்கும், பயிற்றுநர்களுக்கும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
|
|||||
by Kumar on 04 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|