|
|||||
அழகான கையெழுத்தில் உலகை அசத்திய நேபாள மாணவி |
|||||
பள்ளியில் சேர்ந்து எழுதத்தொடங்கிய முதல் எழுத்து அனைவருக்கும் கிறுக்கலாகவே இருக்கும். பின்னர், போகப்போக பயிற்சியின் காரணமாகவும், ஆசிரியர் மற்றும் பெற்றோரின் கவனிப்பு காரணமாகவும் அது அழகாய் மாறும். சிலர் கையெழுத்து பயிற்சிக்கு சிறப்பு வகுப்புகளுக்கும் செல்வதுண்டு.
ஆசிரியரும், பெற்றோரும் மாணவர்களுக்கு அடிக்கடி அறிவுறுத்துவது தேர்வுகளில் கையெழுத்து அழகாக இருந்தால்தான் மதிப்பெண்கள் நமக்கு அதிகமாக கிடைக்கும் என்பதாகும்.
கையெழுத்து அழகாக இருந்தால் தலையெழுத்து அழகாக இருக்கும் என்றும் கூறுவார்கள், அடடா அவனை போல, அவளைபோல எனக்கு ஏன் கையெழுத்து வரமாட்டேங்குது என ஏங்கும் ஆதங்கப்பட்டுக் கொள்ளும் மாணவர்களில் ஒருவராக நிச்சயம் நாமும் இருப்போம். இது உண்மைதானே.
அவர்களின் எழுத்து நடையும், படிப்பும் சிறப்பாக இருந்தால் அவர்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய உச்சத்தை அடைவார்கள். பல ஜாம்பவான்களின் கையெழுத்து பார்க்க அற்புதமாக இருக்கும். சிலர் இதில் விதி விலக்காக இருப்பார்கள்.
இந்நிலையில், நேபாளத்தை சேர்ந்த 16 வயது மாணவியின் கையெழுத்து உலகிலேயே மிக அழகான கையெழுத்து என்ற பெருமையை பெற்றுள்ளது. அந்த கையெழுத்தை பார்த்தால் இப்படி ஒரு கையெழுத்து நமக்கில்லையே என பெருமூச்சு விடுவோர் மத்தியில் கம்ப்யூட்டரே வெட்கப்படும் என்ற நிலை வந்துள்ளது.
நேபாளத்தை சேர்ந்த 16 வயதாகும் பிரகிருதி மல்லா என்ற மாணவியின் இந்த அழகிய கையெழுத்துதான் உலகின் அழகான கையெழுத்து என்ற புகழை பெற்றுள்ளது.
மாணவி பிரகிருதி மல்லா தனது சிறுவயதிலேயே அழகான கையெழுத்தை எழுதி வருவதாக கூறப்படுகிறது. சக மாணவர்கள், ஆசிரியர்களை தாண்டி நோபாள மக்களின் கவனத்தை ஈர்த்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று அவரை அப்போதே உயர்த்தியது.
இதனிடையே, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 51-வது ஒற்றுமை தினத்தையொட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதரகத்துக்கு மாணவி பிரகிருதி மல்லா எழுதிய ஒரு வாழ்த்து மடல் விழாவின்போது அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
அதன்பிறகுதான் நேபாள மக்களின் மனதை கொள்ளையடித்த அந்த கையெழுத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது. புருவங்களை உயர்த்தியது.
ஆம்... அந்த அழகிய கையெழுத்தை பார்த்து வாய்ப்பிளந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதரக அதிகாரிகள் அதை தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மாணவி பிரகிருதி மல்லா-வை கவுரப்படுத்தினர். அதன்பிறகு, மாணவி பிரகிருதி மல்லா வின் கையெழுத்து உலக அளவில் வைரலாகி அவரை உச்சாணிக்கு கொண்டுசென்று நிறுத்தி உள்ளது.
நேபாளத்தை சேர்ந்த 16 வயதாகும் பிரகிருதி மல்லா என்ற மாணவியின் இந்த அழகிய கையெழுத்து உலகின் அழகான கையெழுத்து என்ற புகழை பெற்றுள்ளது. பள்ளியில் சேர்ந்து எழுதத்தொடங்கிய முதல் எழுத்து அனைவருக்கும் கிறுக்கலாகவே இருக்கும். பின்னர், போகப்போக பயிற்சியின் காரணமாகவும், ஆசிரியர் மற்றும் பெற்றோரின் கவனிப்பு காரணமாகவும் அது அழகாய் மாறும். சிலர் கையெழுத்து பயிற்சிக்கு சிறப்பு வகுப்புகளுக்கும் செல்வதுண்டு. ஆசிரியரும், பெற்றோரும் மாணவர்களுக்கு அடிக்கடி அறிவுறுத்துவது தேர்வுகளில் கையெழுத்து அழகாக இருந்தால்தான் மதிப்பெண்கள் நமக்கு அதிகமாக கிடைக்கும் என்பதாகும். கையெழுத்து அழகாக இருந்தால் தலையெழுத்து அழகாக இருக்கும் என்றும் கூறுவார்கள், அடடா அவனை போல, அவளைபோல எனக்கு ஏன் கையெழுத்து வரமாட்டேங்குது என ஏங்கும் ஆதங்கப்பட்டுக் கொள்ளும் மாணவர்களில் ஒருவராக நிச்சயம் நாமும் இருப்போம். இது உண்மைதானே. அவர்களின் எழுத்து நடையும், படிப்பும் சிறப்பாக இருந்தால் அவர்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய உச்சத்தை அடைவார்கள். பல ஜாம்பவான்களின் கையெழுத்து பார்க்க அற்புதமாக இருக்கும். சிலர் இதில் விதி விலக்காக இருப்பார்கள். இந்நிலையில், நேபாளத்தை சேர்ந்த 16 வயது மாணவியின் கையெழுத்து உலகிலேயே மிக அழகான கையெழுத்து என்ற பெருமையை பெற்றுள்ளது. அந்த கையெழுத்தை பார்த்தால் இப்படி ஒரு கையெழுத்து நமக்கில்லையே என பெருமூச்சு விடுவோர் மத்தியில் கம்ப்யூட்டரே வெட்கப்படும் என்ற நிலை வந்துள்ளது. நேபாளத்தை சேர்ந்த 16 வயதாகும் பிரகிருதி மல்லா என்ற மாணவியின் இந்த அழகிய கையெழுத்துதான் உலகின் அழகான கையெழுத்து என்ற புகழை பெற்றுள்ளது. மாணவி பிரகிருதி மல்லா தனது சிறுவயதிலேயே அழகான கையெழுத்தை எழுதி வருவதாக கூறப்படுகிறது. சக மாணவர்கள், ஆசிரியர்களை தாண்டி நோபாள மக்களின் கவனத்தை ஈர்த்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று அவரை அப்போதே உயர்த்தியது. இதனிடையே, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 51-வது ஒற்றுமை தினத்தையொட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதரகத்துக்கு மாணவி பிரகிருதி மல்லா எழுதிய ஒரு வாழ்த்து மடல் விழாவின்போது அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. அதன்பிறகுதான் நேபாள மக்களின் மனதை கொள்ளையடித்த அந்த கையெழுத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது. புருவங்களை உயர்த்தியது. ஆம்... அந்த அழகிய கையெழுத்தை பார்த்து வாய்ப்பிளந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதரக அதிகாரிகள் அதை தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மாணவி பிரகிருதி மல்லா-வை கவுரப்படுத்தினர். அதன்பிறகு, மாணவி பிரகிருதி மல்லா-வின் கையெழுத்து உலக அளவில் வைரலாகி அவரை உச்சாணிக்கு கொண்டுசென்று நிறுத்தி உள்ளது. |
|||||
by Kumar on 05 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|