LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அழகான கையெழுத்தில் உலகை அசத்திய நேபாள மாணவி

பள்ளியில் சேர்ந்து எழுதத்தொடங்கிய முதல் எழுத்து அனைவருக்கும் கிறுக்கலாகவே இருக்கும். பின்னர், போகப்போக பயிற்சியின் காரணமாகவும், ஆசிரியர் மற்றும் பெற்றோரின் கவனிப்பு காரணமாகவும் அது அழகாய் மாறும். சிலர் கையெழுத்து பயிற்சிக்கு சிறப்பு வகுப்புகளுக்கும் செல்வதுண்டு.
ஆசிரியரும், பெற்றோரும் மாணவர்களுக்கு அடிக்கடி அறிவுறுத்துவது தேர்வுகளில் கையெழுத்து அழகாக இருந்தால்தான் மதிப்பெண்கள் நமக்கு அதிகமாக கிடைக்கும் என்பதாகும்.
கையெழுத்து அழகாக இருந்தால் தலையெழுத்து அழகாக இருக்கும் என்றும் கூறுவார்கள், அடடா அவனை போல, அவளைபோல எனக்கு ஏன் கையெழுத்து வரமாட்டேங்குது என ஏங்கும் ஆதங்கப்பட்டுக் கொள்ளும் மாணவர்களில் ஒருவராக நிச்சயம் நாமும் இருப்போம். இது உண்மைதானே.
அவர்களின் எழுத்து நடையும், படிப்பும் சிறப்பாக இருந்தால் அவர்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய உச்சத்தை அடைவார்கள். பல ஜாம்பவான்களின் கையெழுத்து பார்க்க அற்புதமாக இருக்கும். சிலர் இதில் விதி விலக்காக இருப்பார்கள்.
இந்நிலையில், நேபாளத்தை சேர்ந்த 16 வயது மாணவியின் கையெழுத்து உலகிலேயே மிக அழகான கையெழுத்து என்ற பெருமையை பெற்றுள்ளது. அந்த கையெழுத்தை பார்த்தால் இப்படி ஒரு கையெழுத்து நமக்கில்லையே என பெருமூச்சு விடுவோர் மத்தியில் கம்ப்யூட்டரே வெட்கப்படும் என்ற நிலை வந்துள்ளது.
நேபாளத்தை சேர்ந்த 16 வயதாகும் பிரகிருதி மல்லா என்ற மாணவியின் இந்த அழகிய கையெழுத்துதான் உலகின் அழகான கையெழுத்து என்ற புகழை பெற்றுள்ளது.
மாணவி பிரகிருதி மல்லா தனது சிறுவயதிலேயே அழகான கையெழுத்தை எழுதி வருவதாக கூறப்படுகிறது. சக மாணவர்கள், ஆசிரியர்களை தாண்டி நோபாள மக்களின் கவனத்தை ஈர்த்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று அவரை அப்போதே உயர்த்தியது.
இதனிடையே, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 51-வது ஒற்றுமை தினத்தையொட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதரகத்துக்கு மாணவி பிரகிருதி மல்லா எழுதிய ஒரு வாழ்த்து மடல் விழாவின்போது அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
அதன்பிறகுதான் நேபாள மக்களின் மனதை கொள்ளையடித்த அந்த கையெழுத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது. புருவங்களை உயர்த்தியது.
ஆம்... அந்த அழகிய கையெழுத்தை பார்த்து வாய்ப்பிளந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதரக அதிகாரிகள் அதை தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மாணவி பிரகிருதி மல்லா-வை கவுரப்படுத்தினர். அதன்பிறகு, மாணவி பிரகிருதி மல்லா வின் கையெழுத்து உலக அளவில் வைரலாகி அவரை உச்சாணிக்கு கொண்டுசென்று நிறுத்தி உள்ளது.
 

நேபாளத்தை சேர்ந்த 16 வயதாகும் பிரகிருதி மல்லா என்ற மாணவியின் இந்த அழகிய கையெழுத்து உலகின் அழகான கையெழுத்து என்ற புகழை பெற்றுள்ளது.

பள்ளியில் சேர்ந்து எழுதத்தொடங்கிய முதல் எழுத்து அனைவருக்கும் கிறுக்கலாகவே இருக்கும். பின்னர், போகப்போக பயிற்சியின் காரணமாகவும், ஆசிரியர் மற்றும் பெற்றோரின் கவனிப்பு காரணமாகவும் அது அழகாய் மாறும். சிலர் கையெழுத்து பயிற்சிக்கு சிறப்பு வகுப்புகளுக்கும் செல்வதுண்டு.

ஆசிரியரும், பெற்றோரும் மாணவர்களுக்கு அடிக்கடி அறிவுறுத்துவது தேர்வுகளில் கையெழுத்து அழகாக இருந்தால்தான் மதிப்பெண்கள் நமக்கு அதிகமாக கிடைக்கும் என்பதாகும். கையெழுத்து அழகாக இருந்தால் தலையெழுத்து அழகாக இருக்கும் என்றும் கூறுவார்கள், அடடா அவனை போல, அவளைபோல எனக்கு ஏன் கையெழுத்து வரமாட்டேங்குது என ஏங்கும் ஆதங்கப்பட்டுக் கொள்ளும் மாணவர்களில் ஒருவராக நிச்சயம் நாமும் இருப்போம். இது உண்மைதானே.

அவர்களின் எழுத்து நடையும், படிப்பும் சிறப்பாக இருந்தால் அவர்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய உச்சத்தை அடைவார்கள். பல ஜாம்பவான்களின் கையெழுத்து பார்க்க அற்புதமாக இருக்கும். சிலர் இதில் விதி விலக்காக இருப்பார்கள்.

இந்நிலையில், நேபாளத்தை சேர்ந்த 16 வயது மாணவியின் கையெழுத்து உலகிலேயே மிக அழகான கையெழுத்து என்ற பெருமையை பெற்றுள்ளது. அந்த கையெழுத்தை பார்த்தால் இப்படி ஒரு கையெழுத்து நமக்கில்லையே என பெருமூச்சு விடுவோர் மத்தியில் கம்ப்யூட்டரே வெட்கப்படும் என்ற நிலை வந்துள்ளது.

நேபாளத்தை சேர்ந்த 16 வயதாகும் பிரகிருதி மல்லா என்ற மாணவியின் இந்த அழகிய கையெழுத்துதான் உலகின் அழகான கையெழுத்து என்ற புகழை பெற்றுள்ளது.

மாணவி பிரகிருதி மல்லா தனது சிறுவயதிலேயே அழகான கையெழுத்தை எழுதி வருவதாக கூறப்படுகிறது. சக மாணவர்கள், ஆசிரியர்களை தாண்டி நோபாள மக்களின் கவனத்தை ஈர்த்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று அவரை அப்போதே உயர்த்தியது.

இதனிடையே, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 51-வது ஒற்றுமை தினத்தையொட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதரகத்துக்கு மாணவி பிரகிருதி மல்லா எழுதிய ஒரு வாழ்த்து மடல் விழாவின்போது அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. அதன்பிறகுதான் நேபாள மக்களின் மனதை கொள்ளையடித்த அந்த கையெழுத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது. புருவங்களை உயர்த்தியது.

ஆம்... அந்த அழகிய கையெழுத்தை பார்த்து வாய்ப்பிளந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதரக அதிகாரிகள் அதை தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மாணவி பிரகிருதி மல்லா-வை கவுரப்படுத்தினர். அதன்பிறகு, மாணவி பிரகிருதி மல்லா-வின் கையெழுத்து உலக அளவில் வைரலாகி அவரை உச்சாணிக்கு கொண்டுசென்று நிறுத்தி உள்ளது.
 

by Kumar   on 05 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.