நார்வேயின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கம்சாயினி குணரத்தினம்
நார்வேயில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தன் வெற்றியை சிறந்த முறையில் பதிவு செய்து, நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார், யாழ்ப்பாண தமிழ்ப் பெண் கம்சாயினி குணரத்தினம் (33).
கம்சி குணரத்தினம் என அறியப்படும் கம்சாயினி குணரத்னம் இலங்கை,யாழ்ப்பாணம்,கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே நார்வே நாட்டிற்கு பெற்றோருடன் புலம்பெயர்ந்து உள்ளார் . தமிழ் மொழியினை சிறுவயதிலேயே கற்றுள்ளார். நார்வே குடியுரிமை பெற்றவர். ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் சமூகப்-புவியியலில் பட்டம் பெற்றவர்.
தொழிற் கட்சியில் இணைந்து இவரது அரசியல் பயணம் தொடங்கியுள்ளது. ஆஸ்லோ மாநகரக் கிளை துணைத்தலைவர், இளைஞர் பிரிவுத் தலைவராகவும் இருந்துள்ளார் கம்சி.2011-ஆம் ஆண்டு நார்வேயின் தீவிரவாத தாக்குதலில் இருந்து தப்பியவர். நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்திய போது பிரதமர் பதவிக்கான வேட்பாளருக்கு அடுத்த நிலையில் கம்சியை நிறுத்தியதன் மூலமாக அவரது நாடாளுமன்ற பதவி உறுதியானது.தற்போது நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று கம்சி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது அரசியல் எதிர்காலம் மேலும் பிரகாசமாகி உள்ளது.
அவரது வெற்றி புலம்பெயர் தமிழர் மற்றும் தமிழ் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
|