21 அடி, 41 அடி, 77 அடி என தற்காலத்தில் அமைக்கப்படும் உயரமான சுவாமி சிலைகளைப் பார்த்தே நாம் மூக்கின் மேல் விரலை வைக்கிறோம்.
ஆனால், ஒரு காலத்தில் பத்து கி.மீ., நீளத்திற்கு பாம்பு சிலை அமைத்துள்ளனர். இன்று அச்சிலையை முழுமையாக பார்க்க முடியாவிட்டாலும்,
தலையை ஒரு இடத்திலும், உடலை ஒரு இடத்திலும், வாலை பத்து கி.மீ., தள்ளி சென்றுமே பார்க்க முடிகிறது. இந்த அதிசய பாம்பு தெய்வத்தை
நாககன்னி' என அழைக்கின்றனர்.தீராத வழக்குகளைப் பொறுத்தவரை அரசர்களுக்கு இங்குள்ள திருவட்டப்பாறை ஒரு வரப்பிரசாதம். ஒருவன் பொய்
சொல்வதாகக் கருதினால், அவனை இப்பாறை மீது ஏறச்சொல்லி, சத்தியம் செய்யச்சொல்வது வழக்கம்.
ஒருவேளை அந்த ஆசாமி பொய் சொன்னால் அவனது கண்கள் குருடாகி விடும் என்பதும், பாம்பு கடித்து இறந்து விடுவான் என்பதும் ஒரு நம்பிக்கை.
21 அடி, 41 அடி, 77 அடி என தற்காலத்தில் அமைக்கப்படும் உயரமான சுவாமி சிலைகளைப் பார்த்தே நாம் மூக்கின் மேல் விரலை வைக்கிறோம். ஆனால், ஒரு காலத்தில் பத்து கி.மீ., நீளத்திற்கு பாம்பு சிலை அமைத்துள்ளனர். இன்று அச்சிலையை முழுமையாக பார்க்க முடியாவிட்டாலும், தலையை ஒரு இடத்திலும், உடலை ஒரு இடத்திலும், வாலை பத்து கி.மீ., தள்ளி சென்றுமே பார்க்க முடிகிறது.
இந்த அதிசய பாம்பு தெய்வத்தை நாககன்னி' என அழைக்கின்றனர். தீராத வழக்குகளைப் பொறுத்தவரை அரசர்களுக்கு இங்குள்ள திருவட்டப்பாறை ஒரு வரப்பிரசாதம். ஒருவன் பொய் சொல்வதாகக் கருதினால், அவனை இப்பாறை மீது ஏறச்சொல்லி, சத்தியம் செய்யச்சொல்வது வழக்கம். ஒருவேளை அந்த ஆசாமி பொய் சொன்னால் அவனது கண்கள் குருடாகி விடும் என்பதும், பாம்பு கடித்து இறந்து விடுவான் என்பதும் ஒரு நம்பிக்கை. |