LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நற்றிணை பதிப்பகம் சார்பில் பிரபஞ்சன் நினைவு சிறுகதை போட்டி அறிவிப்பு!

நற்றிணை பதிப்பகம் சார்பில் பிரபஞ்சன் நினைவு சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.

நல்ல தமிழ் நூல்களை நற்றிணை பதிப்பகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மகத்தான படைப்பாளுமையான எழுத்தாளர் பிரபஞ்சனின் நினைவைப் போற்றும் விதமாகவும், படைப்பாளிகளின் புதிய முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் பிரபஞ்சன் நினைவு சிறுகதைப் போட்டி ஒன்றை இந்த ஆண்டு நற்றிணை பதிப்பகம் நடத்துகிறது.முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக.ரூ.2 ஆயிரம், ஊக்கப் பரிசாக 10 சிறுகதைகளுக்கு தலா.ரூ.500 வழங்கப்பட உள்ளது.

சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். யூனிகோடு எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும். அனுப்பியவரின் உண்மையான பெயர், முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல் முகவரி தெளிவாகக் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

கையெழுத்து- தட்டச்சுப் பிரதிகள் ஏற்கப்பட மாட்டாது. தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படும். சிறுகதைப் போட்டிக்கு கதைகள் அனுப்பி வைக்க கடைசித்தேதி: பிப்ரவரி 15, 2019.வெற்றி பெற்ற சிறுகதைகள் பற்றிய அறிவிப்பு தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ல் வெளியிடப்பட்டு, பிரபஞ்சனின் பிறந்த தினமான  ஏப்ரல் 27 அன்று புத்தகமாக வெளியிடப்படும். மொழிபெயர்ப்பு சிறுகதைகள் ஏற்கப்பட மாட்டாது.

கதைகள் இதற்கு முன் வெளியானதில்லை என்னும் உறுதிமொழி தர வேண்டும்.  போட்டி குறித்து  எந்தவிதமான கடிதத் தொடர்போ, தொலைபேசித் தொடர்போ வைத்துக் கொள்ளக் கூடாது. சிறுகதைகளை namnatrinai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

by Mani Bharathi   on 03 Jan 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
25-Jan-2019 09:47:26 விக்ரம் said : Report Abuse
போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைக்கான வார்த்தைகளின் உச்சவரம்பு பற்றி இந்த விளம்பரத்தில் தகவல் எதுவும் இல்லை. அந்தத் தகவல் பகிரப் பட்டால் உதவியாக இருக்கும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.