பணிச்சுமை என்பது மனிதனுக்கு மட்டும் தானா, மனிதனால் கண்டுபிடித்த ரோபோவுக்கு இருக்காதா, என்ற கேள்விக்கு விடை கூறும் வகையில் ஆஸ்திரிய நாட்டில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது.
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் ஹின்டர்டுடேர் நகரின் ஒரு வீட்டை சுத்தப்படுத்தும் பணியில், ரோபோ ஈடுபடுத்தப்பட்டிருந்தது. அதிக வேலையின் காரணமாக, சில நாட்களாக ரோபோ, சோர்வடைந்த நிலையில் காணப்பட்டது. அதன் காரணமாக அந்த வீட்டு உரிமையாளர், ரோபோவை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்தார். தொடர் பணிச்சுமையின் தூண்டுதலால், இந்த ரோபோ தானாக சமையலறைக்குச் சென்று, அடுப்பை மூட்டி, அதில் குதித்து, தீயில் எரிந்து, தற்கொலை செய்து கொண்டுள்ளது. ரோபோவின் தற்கொலையால் கட்டடம் முழுவதும் புகை பரவியதால், அங்கு வசித்தவர்கள் அனைவரும் காலி செய்து வெளியேறினர். விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு துறை அதிகாரிகள், ரோபோ, தனக்குத் தானே, "ரீஆக்டிவேட்' செய்து, தீயில் குதித்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு நமக்கெல்லாம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், ரோபோவுக்கு கூட ஓய்வு தேவை என்பதை வலியுறுத்தி இருக்கிறது.
|