|
|||||
பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது! |
|||||
அனைவரது மனதையும் கவரும் வகையில் எழுதிவரும் பிரபல எழுத்தாளர்களுள் ஒருவர் எஸ். இராமகிருஷ்ணன். அவரது ‘சஞ்சாரம்’ என்ற படைப்புக்கு, சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு உள்ளது. சாகித்திய அகாடமி விருது என்பது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான படைப்புகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 'சஞ்சாரம்’ என்னும் நாவலை எழுதியதற்காக பிரபல எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் இந்த(2018) ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பக்திச் சொற்பொழிவு ஆகியவற்றின் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இராமகிருஷ்ணன் தலைசிறந்த எழுத்தாளர் மட்டும் அல்ல; மிகச்சிறந்த சொற்பொழிவாளர். தங்கு தடையின்றி அருவி போலப் பொழியக்கூடியவர். உலக இலக்கியங்களை எல்லாம் பேருரைகளாகத் தந்திருக்கின்றார். தன்னை ஒரு கதைசொல்லி என்றே சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைபவர். அவரது படைப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறும் தகுதியுடையவர் எனப் பலராலும் பாராட்டப்படக் கூடியவர் எனக் கூறினால் அதில் மிகையில்லை. |
|||||
by Mani Bharathi on 06 Dec 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|