கென்ய நாட்டு பெண்ணை கடத்தியதாக சவுதி அரேபிய இளவரசி மஷேல் அலேபான் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
கலிபோர்னியாவில் உள்ள இர்வினில் தங்கியுள்ள இளவரசி மஷேல் அலேபான் கென்யா நாட்டு பெண் ஒருவரின் பாஸ்போர்ட்டை தன்னிடம் வைத்துக்கொண்டு அவருக்கு விடுப்பு தராமல் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி துன்புறுத்தியதாக, அங்கிருந்து தப்பி வந்த கென்யா பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டின் அடிப்டையில் சவுதி இளவரசி மெஸ்கேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
|