LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

சியாட்டிலில் பட்டிப்பொங்கல் விழா - 2023

"ஜனவரி 15 ஆம் தேதி, ஸ்டார் கலைக்குழு (சியாட்டில் தமிழ் ஆர்ட்ஸ் ஆஃப் ரிதம் / Seattle Tamil Arts of Rhythm ) தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான பொங்கல் விழாவை சியாட்டிலில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் சேர்ந்து நவாலிட்டி ஹில் பார்ம் (விவசாயத் தோட்டத்தில்) நடத்தியது.

ஐந்து பொங்கல் ஐந்து (பட்டியார், சூரியன், விநாயகர், காவல் தெய்வம், குலதெய்வம்) கடவுள்களுக்காக படைக்கப்பட்டது. தெப்பக்குளம் கட்டி அதில் ஏழு கன்னிமார்கள், காதோலை கருகமணி, ஒரு படி அரிசியில் ரெட்டை மைகோதி மற்றும் மாவிளக்கு படைத்து பட்டிப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாளான பொங்கல் என்பது சூரியக் கடவுளான சூரியனைப் போற்றும் மற்றும் அறுவடைக் காலத்தை முன்னிட்டு தமிழ் சமூகத்தில் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பருவத்தின் முதல் அரிசியை கொதிக்க வைப்பதன் மூலம் திருவிழா குறிக்கப்படுகிறது,

இந்நிகழ்வில் தமிழ் பாரம்பரிய நடனங்களான பறை, ஒயிலாட்டம் மற்றும் பெண்கள் கும்மி அடித்து ஆடினார்கள். குழந்தைகள் உறியடி, பம்பரம், சாக்கு ஓட்டப் போட்டி விளையாண்டு மகிழ்ந்தனர். பாரம்பரிய பொங்கல் விருந்து உண்டு வந்திருந்த உறவினர் மற்றும் விருந்தினர் ஊர்ப் பொங்கல் விழாவிற்கு சென்று வந்த களிப்புடன் வீடு திரும்பினர்.

ஸ்டார் (STAR) சியாட்டில் பகுதியில் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமாகும். ஸ்டார் இங்குள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பறை, சிலம்பம், அடிமுறை, ஒயிலாட்டம் மற்றும் கரகாட்டம் போன்ற கலைகளைக் கற்றுக்கொடுத்து தமிழர் பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறையினர்க்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழ் நாட்டில் நாட்டுப்புறக் கலைஞர்களின் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளை கல்லூரிகளில் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

ஸ்டார் வருடா வருடம் பட்டிப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உட்பட ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. சமூகத்தை ஒன்றிணைத்து தமிழ் கலாசாரத்தை வெளிக்கொணர இந்த அமைப்பின் முயற்சிகளை கலந்து கொண்டவர்கள் பாராட்டி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. STAR தலைவர், திரு ஜெயக்குமார் கிருஷ்ணன் இவ்விழாவை முன்னின்று நடத்தினார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொங்கலைக் ஒன்றிணைந்து கொண்டாடியது கண்டு மகிழ்ச்சியடைந்தனர். இந்த விழா நமது கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகும், மேலும் நமது பாரம்பரியத்தை பாதுகாப்பதில் இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

https://www.facebook.com/STARKalaiKuzhu

by Swathi   on 13 Feb 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.