உலக அளவில் பயணிகளை ஈர்க்கும் சுற்றுல்லாதளங்களின் வரிசையில் இந்தியாவின் தாஜ்மகால் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. டிரிப் அட்வைசர்ஸ் என்ற பன்னாட்டு நிறுவனம், 2013ம் ஆண்டில் சுற்றுலா பயணிககளை ஈர்க்கும் சுற்றுல்லாதளங்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் 25 முக்கிய சுற்றுலா தலங்கள் பட்டியலிடப்பட்டன. பெரும்பாலான சுற்றுலா பயணிகளின் கருத்து படி, பெரு நாட்டைச் சேர்ந்த மச்சு பிச்சு முதல் இடத்தையும், கம்போடிய நாட்டில் உள்ள அங்கோர் வாட் கோயில் இரண்டாம் இடத்தையும், உலக காதல் சின்னமான தாஜ்மகால் மூன்றாம் இடத்தையும் பிடித்தது. மேலும் இந்த ஆய்வு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அடிப்படையாகக் கொண்டும் தரவரிசை பட்டுத்தப்பட்டதாக சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் முகலாய மன்னன் ஷாஜகான் தனது அன்பு மனைவியின் நினைவாக வெள்ளை பளிங்கு கற்களால் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் கட்டியது. 1983ம் ஆண்டில் தாஜ்மகால் உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|