பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி மலாலா, கடந்த ஆண்டு, பெண்கல்விக்காக போராடியதால் தலீபான்களால் சுடப்பட்டாள். தலையில் குண்டு காயம் அடைந்த மலாலா, இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து, தற்போது அங்கு கல்வி பயின்று வருகிறாள். இந்நிலையில் முன்னால் அதிபர் முஷரப் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வரும் தலீபான் தீவிரவாதி அத்னன் ரஷித், மலாலாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, மலாலா, நீ பள்ளிக்கு சென்று படித்ததற்காக, நாங்கள் உன் மீது தாக்குதல் நடத்தவில்லை. ஆணோ, பெண்ணோ படிப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. நீ தலீபான்களுக்கு எதிராக எழுதியும் பேசியும் வந்ததால்தான் தாக்குதல் நடத்தினோம்.இப்போது, நீ பாகிஸ்தானுக்கு வா, இஸ்லாமிய கலாச்சாரத்தை கடைபிடி. உன் சொந்த ஊருக்கு அருகே உள்ள பெண்கள் மதரசா பள்ளியில் சேர்ந்து படி. நம்மை அடிமைப்படுத்தும் சக்திகளை உலகிற்கு அம்பலப்படுத்து.இவ்வாறு தலீபான் தீவிரவாதி அத்னன் ரஷித், கடிதத்தில் எழுதியுள்ளார்.
|