|
|||||
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் வகுப்புகள் தொடங்கியது |
|||||
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே உருவானது தமிழ் என போற்றப்படுகிறது. தமிழை உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் தமிழ் சென்று சேர்ந்திடவும் வேற்று மொழி இடைநுழைவால் தமிழை தமிழர்கள் மறந்துவிடக்கூடாது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தமிழ் மொழி உலகெங்கும் பரப்பப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக தமிழக அரசும் கோரிக்கைக்கு ஏற்ப நிதி உதவியும் வழங்கி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் நான்காவது பெருநகரமான ஹூஸ்டன் மாநகரத்தில் 1927-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ், இலக்கிய, பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்காக ஓர் தமிழ் இருக்கையை நிறுவிட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துடன் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது.
பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட தமிழக அரசிடம் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு நிதியுதவி கோரியிருந்தது.
அதன்படி, ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிடும் பொருட்டு 3 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கிட ஆணையிடப்பட்டு, 3 லட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகையான 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோரிடம் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதனைதொடர்ந்து ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில், தமிழ் வகுப்புகள் ஆகஸ்ட் 28, 2023 திங்கட்கிழமை முதல், முறையாக தொடங்கியது. இதில், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையம் மூலம் பத்து மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
வகுப்புகள் தொடக்க விழாவில் தமிழ் இருக்கை தலைவர் சாம் சொக்கலிங்கம், இந்திய தூதரக அதிகாரி மஞ்சுநாத், இந்தியாவை சேர்ந்த முனைவர் த.விஜயலக்ஷ்மி, பல்கலைக்கழக டீன் ஓ கானர், பல்கலைக்கழக வேந்தர், முனைவர் ரேணு கத்தோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே உருவானது தமிழ் என போற்றப்படுகிறது. தமிழை உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் தமிழ் சென்று சேர்ந்திடவும் வேற்று மொழி இடைநுழைவால் தமிழை தமிழர்கள் மறந்துவிடக்கூடாது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தமிழ் மொழி உலகெங்கும் பரப்பப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக தமிழக அரசும் கோரிக்கைக்கு ஏற்ப நிதி உதவியும் வழங்கி வருகிறது.
பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட தமிழக அரசிடம் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு நிதியுதவி கோரியிருந்தது. அதன்படி, ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிடும் பொருட்டு 3 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கிட ஆணையிடப்பட்டு, 3 லட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகையான 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோரிடம் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
|
|||||
by Kumar on 04 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|