LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் வகுப்புகள் தொடங்கியது

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே உருவானது தமிழ் என போற்றப்படுகிறது. தமிழை உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் தமிழ் சென்று சேர்ந்திடவும் வேற்று மொழி இடைநுழைவால் தமிழை தமிழர்கள் மறந்துவிடக்கூடாது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தமிழ் மொழி உலகெங்கும் பரப்பப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக தமிழக அரசும் கோரிக்கைக்கு ஏற்ப நிதி உதவியும் வழங்கி வருகிறது.
இந்நிலையில்  அமெரிக்காவின் நான்காவது பெருநகரமான ஹூஸ்டன் மாநகரத்தில் 1927-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ், இலக்கிய, பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்காக ஓர் தமிழ் இருக்கையை நிறுவிட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துடன் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது.
பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட தமிழக அரசிடம் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு நிதியுதவி கோரியிருந்தது.
அதன்படி, ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிடும் பொருட்டு 3 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கிட ஆணையிடப்பட்டு, 3 லட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகையான 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோரிடம் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதனைதொடர்ந்து  ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில், தமிழ் வகுப்புகள் ஆகஸ்ட் 28, 2023 திங்கட்கிழமை முதல், முறையாக தொடங்கியது. இதில், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையம் மூலம் பத்து மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
வகுப்புகள் தொடக்க விழாவில் தமிழ் இருக்கை தலைவர் சாம் சொக்கலிங்கம், இந்திய தூதரக அதிகாரி மஞ்சுநாத், இந்தியாவை சேர்ந்த முனைவர் த.விஜயலக்ஷ்மி, பல்கலைக்கழக டீன் ஓ கானர், பல்கலைக்கழக வேந்தர், முனைவர் ரேணு கத்தோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே உருவானது தமிழ் என போற்றப்படுகிறது. தமிழை உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் தமிழ் சென்று சேர்ந்திடவும் வேற்று மொழி இடைநுழைவால் தமிழை தமிழர்கள் மறந்துவிடக்கூடாது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தமிழ் மொழி உலகெங்கும் பரப்பப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக தமிழக அரசும் கோரிக்கைக்கு ஏற்ப நிதி உதவியும் வழங்கி வருகிறது.


இந்நிலையில்  அமெரிக்காவின் நான்காவது பெருநகரமான ஹூஸ்டன் மாநகரத்தில் 1927-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ், இலக்கிய, பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்காக ஓர் தமிழ் இருக்கையை நிறுவிட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துடன் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது.

பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட தமிழக அரசிடம் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு நிதியுதவி கோரியிருந்தது. அதன்படி, ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிடும் பொருட்டு 3 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கிட ஆணையிடப்பட்டு, 3 லட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகையான 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோரிடம் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


இதனை தொடர்ந்து  ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில், தமிழ் வகுப்புகள் ஆகஸ்ட் 28, 2023 திங்கட்கிழமை முதல், முறையாக தொடங்கியது. இதில், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையம் மூலம் பத்து மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


வகுப்புகள் தொடக்க விழாவில் தமிழ் இருக்கை தலைவர் சாம் சொக்கலிங்கம், இந்திய தூதரக அதிகாரி மஞ்சுநாத், இந்தியாவை சேர்ந்த முனைவர் த.விஜயலக்ஷ்மி, பல்கலைக்கழக டீன் ஓ கானர், பல்கலைக்கழக வேந்தர், முனைவர் ரேணு கத்தோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

by Kumar   on 04 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.