தமிழ்ப்பேராசிரியரும், இணையத்தமிழ் வளர்ச்சியில் பங்களிப்பு நல்கியவருமான முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், விபுலாநந்த அடிகளார் குறித்த ஆவணப்படங்களைத் தந்தவர். இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் உதவியாளராக இருந்து தமிழிசைக் கலைக்களஞ்சியப் பணியில் ஈடுப்பட்டவர். இத்தகு பின்புலமகொண்ட மு.இளங்கோவன் "தொல்லிசையும் கல்லிசையும்" என்ற பெயரில் ஆவணப்படம் உருவாக்க முன்வந்துள்ளமை பாராட்டினுக்கு உரியது. ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகால வரலாறுகொண்ட இசைத்தமிழ் மேன்மையை- தமிழிசை மேன்மையை உணர்த்தும் வகையில் இந்த ஆவணப்படம் மிகச் சிறப்பாக வெளிவர வாழ்த்துகள்.
|