|
|||||
உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை |
|||||
சின்னமனூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் உடலுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செய்தார்.
***********************
தேனி மாவட்டம் சின்னமனூர் காந்தி நகர் காலனியைச் சேர்ந்தவர் வடிவேல் (37). தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த இவர் கடந்த 2023 செப்டம்பர் 23-ம் தேதியன்று வழக்கம் போல வேலை முடிந்து மாலை இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். சீலையம்பட்டி பகுதியில் செல்லும் போது எதிர்பாராத விதமாக குறுக்கே மாடு வந்ததால் விபத்து ஏற்பட்ட வடிவேல் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்ற வடிவேல், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பின் தனியார் (அப்போலோ) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட வடிவேலு நேற்று உயிரிழந்தார். மூளைச்சாவு அடைந்த உடன் அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
***************************
அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றபோது. சின்னமனூர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வடிவேலின் உடலுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அமைச்சர், அவர் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு உதவியாக இருந்த அவரது மனைவி மற்றும் அவரது தாய், தந்தையருக்கு நன்றியைத் தெரிவித்தார்.
*****************************
இதையடுத்து அரசு மரியாதையுடன் வடிவேலுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வடிவேலுவின் தந்தை தனசேகர பாண்டியன், கண் பார்வையற்ற நிலையில் பல வருடங்களாக வீட்டில் இருப்பதாகவும், அவருக்கு கண் பார்வை பாதிப்படைந்து இருப்பதால் உடனடியாக அரசு சார்பில் கண் பார்வைக்கு உதவிட வேண்டுமென, உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.
******************************
இதையடுத்து விரைவில் அவரை சென்னை அரசு கண் மாற்று சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்று கண் பார்வை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
******************************
உயிரிழந்த வடிவேலுவுக்கு, பட்டுலட்சுமி என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என 2023 செப்டம்பர் 23-ம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். விபத்தில் உயிரிழந்த வடிவேலுவின் உடலில் இருந்து இரண்டு கண்விழிகள், ஈரல், சிறுநீரகங்கள், தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர்.
சின்னமனூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் உடலுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செய்தார். அரசு ஊழியர் தேனி மாவட்டம் சின்னமனூர் காந்தி நகர் காலனியைச் சேர்ந்தவர் வடிவேல் (37). தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த இவர் கடந்த 2023 செப்டம்பர் 23-ம் தேதியன்று வழக்கம் போல வேலை முடிந்து மாலை இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். சீலையம்பட்டி பகுதியில் செல்லும் போது எதிர்பாராத விதமாக குறுக்கே மாடு வந்ததால் விபத்து ஏற்பட்ட வடிவேல் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்ற வடிவேல், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பின் தனியார் (அப்போலோ) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட வடிவேலு நேற்று உயிரிழந்தார். மூளைச்சாவு அடைந்த உடன் அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அமைச்சர் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றபோது. சின்னமனூர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வடிவேலின் உடலுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அமைச்சர், அவர் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு உதவியாக இருந்த அவரது மனைவி மற்றும் அவரது தாய், தந்தையருக்கு நன்றியைத் தெரிவித்தார். அமைச்சர் உறுதியளித்தார்
இதையடுத்து விரைவில் அவரை சென்னை அரசு கண் மாற்று சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்று கண் பார்வை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். உயிரிழந்த வடிவேலுவுக்கு, பட்டுலட்சுமி என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என 2023 செப்டம்பர் 23-ம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். விபத்தில் உயிரிழந்த வடிவேலுவின் உடலில் இருந்து இரண்டு கண்விழிகள், ஈரல், சிறுநீரகங்கள், தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர்.
|
|||||
by Kumar on 29 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|