LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

 

சின்னமனூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் உடலுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செய்தார்.
***********************
தேனி மாவட்டம் சின்னமனூர் காந்தி நகர் காலனியைச் சேர்ந்தவர் வடிவேல் (37). தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த இவர் கடந்த 2023 செப்டம்பர் 23-ம் தேதியன்று வழக்கம் போல வேலை முடிந்து மாலை இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். சீலையம்பட்டி பகுதியில் செல்லும் போது எதிர்பாராத விதமாக குறுக்கே மாடு வந்ததால் விபத்து ஏற்பட்ட வடிவேல் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்ற வடிவேல், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பின் தனியார் (அப்போலோ) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட வடிவேலு நேற்று உயிரிழந்தார். மூளைச்சாவு அடைந்த உடன் அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
***************************
அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றபோது. சின்னமனூர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வடிவேலின் உடலுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அமைச்சர், அவர் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு உதவியாக இருந்த அவரது மனைவி மற்றும் அவரது தாய், தந்தையருக்கு நன்றியைத் தெரிவித்தார்.
*****************************
இதையடுத்து அரசு மரியாதையுடன் வடிவேலுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வடிவேலுவின் தந்தை தனசேகர பாண்டியன், கண் பார்வையற்ற நிலையில் பல வருடங்களாக வீட்டில் இருப்பதாகவும், அவருக்கு கண் பார்வை பாதிப்படைந்து இருப்பதால் உடனடியாக அரசு சார்பில் கண் பார்வைக்கு உதவிட வேண்டுமென, உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.
******************************
இதையடுத்து விரைவில் அவரை சென்னை அரசு கண் மாற்று சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்று கண் பார்வை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
******************************
உயிரிழந்த வடிவேலுவுக்கு, பட்டுலட்சுமி என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என 2023 செப்டம்பர் 23-ம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். விபத்தில் உயிரிழந்த வடிவேலுவின் உடலில் இருந்து இரண்டு கண்விழிகள், ஈரல், சிறுநீரகங்கள், தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர்.

சின்னமனூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் உடலுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செய்தார்.

அரசு ஊழியர் 

தேனி மாவட்டம் சின்னமனூர் காந்தி நகர் காலனியைச் சேர்ந்தவர் வடிவேல் (37). தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த இவர் கடந்த 2023 செப்டம்பர் 23-ம் தேதியன்று வழக்கம் போல வேலை முடிந்து மாலை இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். சீலையம்பட்டி பகுதியில் செல்லும் போது எதிர்பாராத விதமாக குறுக்கே மாடு வந்ததால் விபத்து ஏற்பட்ட வடிவேல் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்ற வடிவேல், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பின் தனியார் (அப்போலோ) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட வடிவேலு நேற்று உயிரிழந்தார். மூளைச்சாவு அடைந்த உடன் அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அமைச்சர்

அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றபோது. சின்னமனூர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வடிவேலின் உடலுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அமைச்சர், அவர் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு உதவியாக இருந்த அவரது மனைவி மற்றும் அவரது தாய், தந்தையருக்கு நன்றியைத் தெரிவித்தார்.

அமைச்சர் உறுதியளித்தார்


இதையடுத்து அரசு மரியாதையுடன் வடிவேலுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வடிவேலுவின் தந்தை தனசேகர பாண்டியன், கண் பார்வையற்ற நிலையில் பல வருடங்களாக வீட்டில் இருப்பதாகவும், அவருக்கு கண் பார்வை பாதிப்படைந்து இருப்பதால் உடனடியாக அரசு சார்பில் கண் பார்வைக்கு உதவிட வேண்டுமென, உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து விரைவில் அவரை சென்னை அரசு கண் மாற்று சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்று கண் பார்வை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

உயிரிழந்த வடிவேலுவுக்கு, பட்டுலட்சுமி என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என 2023 செப்டம்பர் 23-ம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். விபத்தில் உயிரிழந்த வடிவேலுவின் உடலில் இருந்து இரண்டு கண்விழிகள், ஈரல், சிறுநீரகங்கள், தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர்.

 

by Kumar   on 29 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.