LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- தோல் பராமரிப்பு (Skin Care)

உடல் அரிப்பு நீக்க - ஆயுர்வேத மருத்துவம்

மனிதர்களின் நோய்களுக்கு இரண்டு வகையான காரணங்களை கூறலாம்.ஓன்று சாதாரணம், மற்றொன்று  அசாதாரணம்.

அசாதாரணக் நோய்களுக்கான காரணங்கள் :

தவறான உணவு முறையாலும், நடவடிக்கைகளாலும் உடல்நிலை கெட்டு நோய் ஏற்படுதல் அசாதாரணக் காரணம்.

சாதாரணக் நோய்களுக்கான காரணங்கள் :

நமது ஊரில் காற்று, தண்ணீர், ஆகாயம், பூமி, பருவ காலம் போன்றவை, ரசாயனத் தொழிற்சாலைகளாலும், பார்த்தீனியம் போன்ற விஷச்சத்து நிறைந்த செடிகளாலும் கேடுற்று அதன் மூலமாக பொதுவாக பலருக்கும் நோய் வருவது சாதாரண காரணமாகும். இவற்றில் நீங்கள் எதன் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

தயிரைச் சூடாக்கிச் சாப்பிடுவது, மீன் குழம்பைச் சாப்பிட்டவுடன் பால் குடிப்பது, முருங்கைக் கீரை, காலிஃபிளவர் போன்றவற்றை சூடான தண்ணீரில் அலசாமல் சமைத்தல், புளிப்புச் சுவை அதிகமுள்ள உணவை விரும்பிச் சாப்பிடுதல், வெயிலில் அலைந்து அதனால் உடற்சூடு அதிகமாகியுள்ள நிலையில் உடன் குளிர்ந்த நீர், மோர், குளிர் பானங்களைக் குடித்தல், பகலில் சாப்பிட்டதும் படுத்து உறங்குதல் போன்ற தனி நபர் செய்யும் தவறான காரணங்களாலும், தொழிற்சாலைக் கழிவுகளால் அப்பகுதியிலுள்ள நீர்நிலை பாதிக்கப்பட்டு அந்த நீரையே குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்துவதாலும், காற்றின் மூலம் பரவும் நுண்ணிய துகள்கள், மகரந்தங்கள் போன்றவற்றைச் சுவாசிக்க நேர்வதாலும் நீங்கள் குறிப்பிடும் உபாதை ஏற்படுகிறது.மேல் குறிப்பிட்டுள்ள காரணங்களைத் தவிர்க்க முயற்சிக்கவும். மேலும் நீங்கள் வசித்து வரும் இடம் ரசாயனத் தொழிற்சாலைக் கழிவுகள் நிறைந்த இடமாயிருந்தால், வேறு ஏதேனும் பகுதிக்கு சிறிது காலம் மாறி சுத்தமான காற்றும், நீர்நிலையும் கிடைக்கும்படி செய்து கொண்டால் உடல் உபாதை குறைய வாய்ப்பிருக்கிறது. விஷ ஜந்துக்கள் ஏதேனும் நீங்கள் அறியாத நிலையில் தீண்டியிருந்தாலும் தோல் பகுதியில் ஊரலும் தடிப்பும், அரிப்பும் ஏற்பட வாய்ப்புண்டு, உணவு முறையில் கீழ்க்காணும் வகையில் மாற்றம் செய்து கொள்ளவும்.

காலை: உடைத்த அரிசியை உப்புமாவாகச் சாப்பிடவும். புதினா சட்னி
மதியம்: சூடான புழுங்கலரிசி சாதம், சுட்ட புளி, வறுத்த உப்பு ஆகியவற்றைக் கொண்டு சமைக்கப்பட்ட சின்ன வெங்காய சாம்பார், பருப்பு உசிலி மிளகு ஜீரகம் சேர்ந்த எலுமிச்சம் பழம் ரசம், பூசணிக் கூட்டு, நன்கு கடைந்த வெண்ணெய் நீக்கிய மோர், நார்த்தங்காய் வத்தல்.
இரவு: கோதுமை ரொட்டி  வேகவைத்த கறிகாய் கூட்டு


ஆயுர்வேத மருந்துகளில் ஆரக்வாதி கஷாயம் 15 மிலி., 60 மி.லி., சூடான தண்ணீர் கலந்து ஒரு வில்வாதி மாத்திரையை அரைத்துச் சேர்த்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலை இரவு உணவிற்குப் பிறகு கதிராரிஷ்டம் 30 மி.லி. சாப்பிடவும். உடல் மற்றும் தலைக்குத் தேய்த்துக் குளிக்க நால்பாமராதி தைலம் பயன்படுத்தவும். இம்மருந்துகள் 48 நாட்கள் வரை சாப்பிடலாம். கோட்டக்கல் ஆர்ய வைத்யசாலைகளில் இம்மருந்துகள் கிடைக்கும்.பித்தத்தின் சீற்றம் இரத்தத்தில் கலப்பதாலேயே நீர்க் கொப்புளங்கள் ஏற்படுகின்றன. பித்தம் சீற்றமடையக் காரணங்களாக சினம், வருத்தம், அச்சம், பட்டினி கிடத்தல், உப்பு, புளி, காரம் மிகுந்த உணவு, நல்லெண்ணெய், புண்ணாக்கு, கொள்ளு, கடுகு, பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, மீன், வெள்ளாட்டுக்கறி, தயிர், திரிந்த மோர், மதுபானம் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தினால் பித்தம் சீற்றமடைந்து இரத்தத்தைக் கெடுக்கின்றது. இவ்வாறு இரத்தம் கெட்டுப்போன நிலையில் பகல்தூக்கம், நெருப்பின் அருகே வேலை, வெயில், சோர்வு, அஜீரணத்தைத் தரும் உணவு போன்றவற்றால் இரத்தம் மேலும் கேடடைந்து தோலில் நீர்க்கொப்புளத்தைத் தோற்றுவிக்கின்றன.

இந்நோயின் தன்மை வெளிப்புறம் தெரிந்தாலும் அந்நோயின் வேர்ப் பகுதி இரத்தத்தில் கலந்திருப்பதால் மேல் பூச்சு மருந்துகளால் மட்டுமே இதைக் குணப்படுத்த இயலாது. உட்புறக் கழிவுகளை அகற்ற முதலில் குடல் சுத்தி மருந்துகள் சாப்பிடுவது அவசியம். படோலகடுரோஹிண்யாதி கஷாயம் 15 மிலி. 60 மிலி சூடான தண்ணீர் கலந்து ஒரு கண்மத பஸ்மம் என்னும் கேப்ஸ்யூலுடன் (கோட்டக்கல் ஆர்ய வைத்யசாலையில் கிடைக்கும்) காலை, மாலை வெறும் வயிற்றில் 2 வாரங்கள் சாப்பிடவும். இதன்மூலம் கெட்டுள்ள பித்தநீர் குடலுக்குத் திரும்புவதால் கொப்புளங்களிலுள்ள நீரும் வற்றிவிடும். குடலுக்கு வந்துள்ள பித்தநீரை வெளியேற்ற மாணிபத்ரம் எனும் லேஹ்யத்தைக் காலையில் பசி உள்ள நிலையில் 15-20 கிராம் நக்கிச் சாப்பிடவும். அடிக்கடி சூடான தண்ணீரை மெதுவாகப் பருகவும். ஓர் இடத்த்ல் அமராமல் உலாத்தவும். 5-6 முறை நீர் பேதியாக ஆன பிறகு சூடான மிளகு ரசம், சுட்ட அப்பளம் சாப்பிடவும். அதன்பின்னர் சூடு செய்த மோரில் நல்லெண்ணெயில் தாளித்த கடுகு வெந்தயம், கறிவேப்பிலை கலந்து சாதத்துடன் சாப்பிடவும். குடல் சுத்தம் செய்த மறுநாள் முதல் மதுஸ்நுஹீ ரசாயனம் எனும் மருந்தை ஒரு ஸ்பூன் அளவு (5 கிராம்) காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

உங்களுக்கான பத்திய உணவு:
காலை: சூடான சாதத்துடன் பருப்பு நெய் பிசைந்து வேப்பம்பூ ரசம் (அ) தக்காளி ரசத் தெளிவு, மணத்தக்காளிக் கீரை, வாழைப்பூ வடகறி, கடைந்த மோர்.
மதியம்: சுண்டைக்காய் சாம்பார் சாதம், எலுமிச்சம் பழம் ரசம், கடைந்த மோர்.
இரவு: கோதுமை ரவா உப்புமா, சப்ஜி.

இவ்வகை உணவில் குடலில் தங்கியுள்ள வேண்டாத நீர்க்கசிவுகள், கிருமிகள் போன்றவை வெளியேறிவிடும். இவையெல்லாம்  சாத்தியப்படுமா? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த உபாதைக்கு இவைதான் பத்திய உணவு, முடிந்தவரை நீங்கள் முயற்சி செய்யவும்.

by Swathi   on 08 Dec 2012  1 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
23-Jan-2018 02:25:47 Mathan said : Report Abuse
100%
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.