திருநங்கைகள் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவசமாகப் படிக்கலாம், துணைவேந்தரின் அதிரடி அறிவிப்பு
திருநங்கைகள் படிக்கும் ஆர்வத்தினை தூண்டும் வகையிலும் அவர்களது கல்வி கற்கும் திறனை அங்கீகரிக்கும் வகையிலும் சென்னைப் பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. திருநங்கைகள் படிக்க முன்வந்தால் அவர்களது கல்விக் கட்டணத்தைப் பல்கலைக்கழகமே ஏற்கும் என்று தன் அறிவிப்பில் தெரிவித்துள்ளது சென்னை பல்கலைக்கழகம். இதன்படி சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் முதுநிலையில் ஒரு இடமும், இளநிலையில் இரண்டு இடங்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 131 கல்லூரிகள் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு மிகுந்த பாராட்டுகளை பெற்றுள்ளது.
|