LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அமெரிக்காவின் F-35 போர் விமானம் பறக்கும் போதே திடீர் மாயம்

 

மிக நவீன போர் விமானம் ஒன்று எங்கே சென்றது என்று தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறது அமெரிக்க ராணுவம். F-35 வகையை சேர்ந்த இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, விமானி அவசரமாக பாரசூட் மூலமாகக் குதித்துவிட்டார். அதன் பிறகு விமானம் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 17/09/2023 பிற்பகல் தெற்கு கரோலினா மாகாணத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானம் காணாமல் போனது. பாராசூட் உதவியுடன் குதித்த விமானி, மருத்துவமனையில் உள்ளார்.
என்ன நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் விமானம் ‘விபத்துக்குள்ளானதாக’ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சார்லஸ்டன் நகருக்கு வடக்கே உள்ள இரண்டு ஏரிகளை மையப்படுத்தி தேடும் பணி நடைபெற்று வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
கடைசியாக விமானம் பறந்த இடத்தைப் பற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மௌல்ட்ரி ஏரி, மரியான் ஏரி ஆகியவற்றில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
சார்லஸ்டனில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் கூட்டுப் படைத் தளம் இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறது. "அவசர கால மீட்புக் குழுக்கள் F-35 விமானத்தை கண்டுபிடிக்க தொடர்ந்து முயற்சி செய்கின்றன. இந்த முயற்சி தொடர்வதால் பொதுமக்கள் ராணுவம், சிவில் அதிகாரிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்று அதில் கூறப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்களுக்கு உதவும் தகவல்களைத் தெரிவிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதனிடையே, மாயமான விமானத்துடன் பறந்ததாகக் கருதப்படும் இரண்டாவது F-35 ஜெட் விமானம் சார்லஸ்டனில் உள்ள தளத்திற்கு பாதுகாப்பாக திரும்பியது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜ் மெலனி சலினாஸ் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.
இந்த விமானம் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் சுமார் 650 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. F-35 என்பது உலகின் மிகப்பெரிய, அதிகப் பொருட் செலவிலான ஆயுதத் திட்டமாகும்.

மிக நவீன போர் விமானம் ஒன்று எங்கே சென்றது என்று தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறது அமெரிக்க ராணுவம். F-35 வகையை சேர்ந்த இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, விமானி அவசரமாக பாரசூட் மூலமாகக் குதித்துவிட்டார்.

அதன் பிறகு விமானம் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை.கடந்த ஞாயிற்றுக்கிழமை 17/09/2023 பிற்பகல் தெற்கு கரோலினா மாகாணத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானம் காணாமல் போனது. பாராசூட் உதவியுடன் குதித்த விமானி, மருத்துவமனையில் உள்ளார்.என்ன நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை,

ஆனால் விமானம் ‘விபத்துக்குள்ளானதாக’ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சார்லஸ்டன் நகருக்கு வடக்கே உள்ள இரண்டு ஏரிகளை மையப்படுத்தி தேடும் பணி நடைபெற்று வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.கடைசியாக விமானம் பறந்த இடத்தைப் பற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மௌல்ட்ரி ஏரி, மரியான் ஏரி ஆகியவற்றில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

சார்லஸ்டனில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் கூட்டுப் படைத் தளம் இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறது. "அவசர கால மீட்புக் குழுக்கள் F-35 விமானத்தை கண்டுபிடிக்க தொடர்ந்து முயற்சி செய்கின்றன. இந்த முயற்சி தொடர்வதால் பொதுமக்கள் ராணுவம், சிவில் அதிகாரிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.

650 கோடி ரூபாய் மதிப்பு

மீட்புக் குழுக்களுக்கு உதவும் தகவல்களைத் தெரிவிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.இதனிடையே, மாயமான விமானத்துடன் பறந்ததாகக் கருதப்படும் இரண்டாவது F-35 ஜெட் விமானம் சார்லஸ்டனில் உள்ள தளத்திற்கு பாதுகாப்பாக திரும்பியது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜ் மெலனி சலினாஸ் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விமானம் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் சுமார் 650 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. F-35 என்பது உலகின் மிகப்பெரிய, அதிகப் பொருட் செலவிலான ஆயுதத் திட்டமாகும்.

by Kumar   on 20 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.