மகான்கள் ஐக்கியமான தலங்கள் பிருந்தாவனம் என்று அழைக்கப்படும். அதில் ராமானுஜர் ஐக்கியமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விசேஷமான தலமாக இருக்கிறது. அதேபோல் இக்கோயிலில் அஹோபில மடத்தின் 36வது பட்டம் ஜீயர் அழகியசிங்கர், வண்சடகோப ஸ்ரீனிவாச மஹாதேசிகன் சுவாமிகளின் ஜீவ பிருந்தாவனம் உள்ளது. ஆவணி 7 முதல் 12 வரை சூரிய ஒளிக்கதிர் பெருமாளின் பாதத்தில் பட்டு சூரிய வழிபாடு நடக்கிறது.இங்குள்ள மூலவருக்கு பேரழகன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
இவர் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். தாயாரின் சிறப்பு பெயர் அழகுத்தாயார்.மன்னன் மனைவியின் வியாதியை நீக்கி அவளுக்கு அழகு தந்தும், மன்னனின் தவறான எண்ணத்தை போக்கி அவனது உள்ளம் அழகாக இருக்கும்படியும் அருளியதால் இத்தலத்து பெருமாள் "அழகர்' என்று பெயர் பெற்றார். தாயாரும் "அழகுத்தாயார்' எனப்படுகிறார். அழகர் இங்கு உற்சவராக இருக்கிறார். அழகில்லை என வருந்துபவர்கள், பெருமாள் மற்றும் தாயாருக்கு வஸ்திரம் சாத்தி, அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். |