ஈரான், ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தில் 200 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ரிக்டர் அளவுகோளில் 6.4 என்ற அளவுக்கு பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தால் ஈரானின் பல பகுதிகளில் உள்ள மண் வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் 1000-க்கும் தகவல் வெளியாகியுள்ளது. பூகம்பத்தை தொடர்ந்து 50 முறை நில அதிர்வு ஏற்பட்டதால், மக்கள் இரவு முழுக்க சாலைகளிலேயே தங்கியிருந்தனர். கடந்த 2003ம் ஆண்டு, பாம் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில், 31 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|