|
|||||
உலக ஓசோன் தினம் |
|||||
உலக ஓசோன் தினம், ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் என்றும் அழைக்கப்படுகிறது , இது ஆண்டுதோறும் செப்டம்பர் 16 அன்று அனுசரிக்கப்படுகிறது.
++++++++++++++++++
ஓசோன் அடுக்கு, முதன்மையாக மூன்று ஆக்சிஜன் மூலக்கூறுகளால் (O3) ஆனது, சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா (UV) கதிர்களுக்கு எதிராக ஒரு கவசமாக செயல்படுகிறது.
++++++++++++++++++++++++
1970 மற்றும் 1980 களில் , கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வறிஞர்கள் பிராங் ஷெர்வுட் ரவ்லாந்து, மரியோ மோலினா வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்ததையும் அதனால் புற ஊதா கதிர்கள் மனித இனத்தை நேரடியாகத் தாக்கும் என்பதையும் கண்டறிந்தனர்.
+++++++++++++++++++++++++
ஓசோனில் ஓட்டை விழுந்ததால் அதிலிருந்து புறஊதாக்கதிர்கள் நேரிடையாக பூமியை தாக்கும் என்றும் இதனால் மனித இனத்துக்கு ரோபத்து என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அது அவர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியது.
+++++++++++++++++++++++
கதிர்வீச்சு தடுப்பு
++++++++++++++++++++
பூமியிலிருந்து 15 கி.மீ. முதல் 60 கி.மீ உயரம்வரை உள்ள வளிமண்டலப் பகுதி ஸ்டிராட்டோஸ்பியர் எனப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் ஓசோன் படலம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஆக்சிஜன் மீது சூரியனின் புறஊதா கதிர்வீச்சு வேதிவினை புரிவதால் ஆக்சிஜன் (O2) அணுக்கள் பிரிக்கப்பட்டு, அந்த அணுக்கள் புதிய ஆக்சிஜனுடன் சேர்ந்து ஓசோன் வாயுவாக (O3) மாறுகின்றன. இது ஒரு படலம் போலப் பூமியைச் சூழ்ந்திருக்கிறது. இந்தப் படலம் இருப்பதால்தான் சூரியஒளி பூமிக்கு நேரடியாக வருவதில்லை.
+++++++++++++++++++++++
ஓசோன் ஓட்டை
+++++++++++++++++++++++
குளிர்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்), குளிர்சாதனப் பெட்டிகளில் (ஏ/சி) இருந்து வெளியான குளோரோ புளூரோ கார்பன் ஓசோனுடன் வினைபுரிந்து குளோரினாகவும், ஆக்சிஜனாகவும் மாறுகிறது. இதனால் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்துபோகிறது. இதை ‘ஓசோன் ஓட்டை' என்று சொல்வதைவிட ஓசோன் படல மெலிவு என்று சொல்லலாம். இதனால் புறஊதாக் கதிர்கள் எளிதில் உள்ளே நுழைகின்றன.
+++++++++++++++++++++++++
ஓசோன் பாதிப்புக்கு காரணம்
++++++++++++++++++++++
உரங்களில் பயன்படுத்தப்படும் மெத்தில் புரோமைடு, ஜெட் விமானங்கள் வெளியிடும் நைட்ரிக் ஆக்சைடு போன்றவையும் இப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மரக்கட்டை, பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பது, தீயணைப்பு கருவிகள், ஸ்பிரேக்களிலிருந்து வெளி யேறும் குளோரோ புளூரோ கார்பன், டூவீலர்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்களால் காற்று மண்டலம் மாசுபடுவதாலும் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது.
++++++++++++++++++++
நோய் தாக்குதல்
+++++++++++++++++++
இதன் காரணமாகப் புற்றுநோய், தோல் நோய்கள், பார்வை இழப்பு, பயிர்களுக்குப் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். உலகில் தோல் புற்றுநோய்க்கு ஆண்டுதோறும் 80 ஆயிரம் பேர் பலியாவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓசோன் படல மெலிவு விரிவடைவது தடுக்கப்பட்டுவிட்டாலும்கூட, ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்பு முழுமையாகச் சீரமைக்கப்படவில்லை. அதனால், பூமியில் வாழும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு வளி மண்டலத்திலிருந்து நன்மை செய்யும் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறையாமல் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஓசோனைச் சிதைக்கும் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தியாக வேண்டும்.
++++++++++++++++++++++++++
ஓசோன் படலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கு ஒத்துழைப்புக்கான ஒரு பொறிமுறையை நிறுவ சர்வதேச சமூகத்தை தூண்டியது. இது ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான வியன்னா மாநாட்டில் முறைப்படுத்தப்பட்டது , இது 28 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1985 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. அதுமுதல் 1987-ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் உலக ஓசோன் தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 16-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
++++++++++++++++
இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும், நிம்மதியுடன் வாழ துாய காற்று முக்கியமானது.அதனைப்பெறுவதற்கு மரங்கள், பசுமையான செடிகளும் வளர்க்கப்படவேண்டும். இருக்கும் காடுகளை அழிக்காமல் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே பூமியில் வாழும் நாம் அந்த பூமிக்கு செய்யும் மாற்றுக் கடனாக சுற்றுப்புறத்தை பாதிக்க கூடிய காரணிகளை முழுவதுமாக தவிர்த்து ஆடம்பர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முடிந்தவரை எளிமையாக வாழ்ந்தோமானால் நிச்சயம் ஓசோன் படலத்திற்கு பாதிப்பில்லை.
உலக ஓசோன் தினம், ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் என்றும் அழைக்கப்படுகிறது , இது ஆண்டுதோறும் செப்டம்பர் 16 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஓசோன் அடுக்கு, முதன்மையாக மூன்று ஆக்சிஜன் மூலக்கூறுகளால் (O3) ஆனது, சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா (UV) கதிர்களுக்கு எதிராக ஒரு கவசமாக செயல்படுகிறது. 1970 மற்றும் 1980 களில் , கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வறிஞர்கள் பிராங் ஷெர்வுட் ரவ்லாந்து, மரியோ மோலினா வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்ததையும் அதனால் புற ஊதா கதிர்கள் மனித இனத்தை நேரடியாகத் தாக்கும் என்பதையும் கண்டறிந்தனர். ஓசோனில் ஓட்டை விழுந்ததால் அதிலிருந்து புறஊதாக்கதிர்கள் நேரிடையாக பூமியை தாக்கும் என்றும் இதனால் மனித இனத்துக்கு ரோபத்து என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அது அவர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியது. கதிர்வீச்சு தடுப்பு பூமியிலிருந்து 15 கி.மீ. முதல் 60 கி.மீ உயரம்வரை உள்ள வளிமண்டலப் பகுதி ஸ்டிராட்டோஸ்பியர் எனப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் ஓசோன் படலம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஆக்சிஜன் மீது சூரியனின் புறஊதா கதிர்வீச்சு வேதிவினை புரிவதால் ஆக்சிஜன் (O2) அணுக்கள் பிரிக்கப்பட்டு, அந்த அணுக்கள் புதிய ஆக்சிஜனுடன் சேர்ந்து ஓசோன் வாயுவாக (O3) மாறுகின்றன. இது ஒரு படலம் போலப் பூமியைச் சூழ்ந்திருக்கிறது. இந்தப் படலம் இருப்பதால்தான் சூரியஒளி பூமிக்கு நேரடியாக வருவதில்லை. ஓசோன் ஓட்டை குளிர்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்), குளிர்சாதனப் பெட்டிகளில் (ஏ/சி) இருந்து வெளியான குளோரோ புளூரோ கார்பன் ஓசோனுடன் வினைபுரிந்து குளோரினாகவும், ஆக்சிஜனாகவும் மாறுகிறது. இதனால் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்துபோகிறது. இதை ‘ஓசோன் ஓட்டை' என்று சொல்வதைவிட ஓசோன் படல மெலிவு என்று சொல்லலாம். இதனால் புறஊதாக் கதிர்கள் எளிதில் உள்ளே நுழைகின்றன. ஓசோன் பாதிப்புக்கு காரணம் உரங்களில் பயன்படுத்தப்படும் மெத்தில் புரோமைடு, ஜெட் விமானங்கள் வெளியிடும் நைட்ரிக் ஆக்சைடு போன்றவையும் இப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மரக்கட்டை, பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பது, தீயணைப்பு கருவிகள், ஸ்பிரேக்களிலிருந்து வெளி யேறும் குளோரோ புளூரோ கார்பன், டூவீலர்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்களால் காற்று மண்டலம் மாசுபடுவதாலும் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது. நோய் தாக்குதல் இதன் காரணமாகப் புற்றுநோய், தோல் நோய்கள், பார்வை இழப்பு, பயிர்களுக்குப் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். உலகில் தோல் புற்றுநோய்க்கு ஆண்டுதோறும் 80 ஆயிரம் பேர் பலியாவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓசோன் படல மெலிவு விரிவடைவது தடுக்கப்பட்டுவிட்டாலும்கூட, ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்பு முழுமையாகச் சீரமைக்கப்படவில்லை. அதனால், பூமியில் வாழும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு வளி மண்டலத்திலிருந்து நன்மை செய்யும் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறையாமல் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஓசோனைச் சிதைக்கும் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தியாக வேண்டும். ஓசோன் படலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கு ஒத்துழைப்புக்கான ஒரு பொறிமுறையை நிறுவ சர்வதேச சமூகத்தை தூண்டியது. இது ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான வியன்னா மாநாட்டில் முறைப்படுத்தப்பட்டது , இது 28 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1985 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. அதுமுதல் 1987-ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் உலக ஓசோன் தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 16-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும், நிம்மதியுடன் வாழ துாய காற்று முக்கியமானது.அதனைப்பெறுவதற்கு மரங்கள், பசுமையான செடிகளும் வளர்க்கப்படவேண்டும். இருக்கும் காடுகளை அழிக்காமல் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே பூமியில் வாழும் நாம் அந்த பூமிக்கு செய்யும் மாற்றுக் கடனாக சுற்றுப்புறத்தை பாதிக்க கூடிய காரணிகளை முழுவதுமாக தவிர்த்து ஆடம்பர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முடிந்தவரை எளிமையாக வாழ்ந்தோமானால் நிச்சயம் ஓசோன் படலத்திற்கு பாதிப்பில்லை. |
|||||
by Kumar on 17 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|