LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

இளமைப் பழம்!

     குஞ்சுலபாதம் என்ற நாட்டை வசீகரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவர்களுக்கு குழந்தை கிடையாது. அதனால் அவர்கள் ஒரு பச்சைக்கிளியை வளர்த்து வந்தனர். அக்கிளி மிகவும் அழகானது. ஒரு நாள் ஒரு முனி தவம் செய்யும் போது அவர் அருகில் வந்து உட்கார்ந்திருந்தது. “”ஏய் கிளியே… நீ மிகவும் அழகாய் இருக்கிறாய், உனக்கு நான் ஒரு பழம் தருகிறேன். அதை சாப்பிட்டால் என்றும் இளமையுடன் இருப்பாய்,” என்று கூறி பழத்தை கொடுத்தார்.


     கிளி அப்பழத்தை வாங்கி வந்து தான் சாப்பிடாமல் அரசனிடம் கொடுத்தது. அரசன் அப்பழத்தை சாப்பிடாமல் தன் தோட்டத்தில் நட்டு வைத்தால் அம்மரம் பெரிதானவுடன் அதில் வரும் பழத்தை நம் மக்கள் சாப்பிடலாம் என்றெண்ணி அப்பழத்தை நட்டு வைத்தான் அரசன். அம்மரத்திற்கு காவலாளி ஒருவன் இருந்தான். ஒரு நாள் அம்மரம் பெரிதாகி பழம் பழுத்தது. “”ஒரு நாள் இந்த பழத்தை பறித்து தன் அரசனுக்கு மறுநாள் கொடுக்கலாம்,” என்று நினைத்தான்.


     அன்று மாலை ஒரு நல்ல பாம்பு அம்மரத்தில் ஏறி ஒரு பழத்தில் தன் விஷத்தை கக்கியது. அது காவலாளிக்கு தெரியாது. மறுநாள் அந்த காவலன் தன் அரசனுக்கு பழத்தை பறித்துக் கொடுத்தான். அப்பழம் பாம்பு விஷத்தை கக்கிய பழம் என்று தெரியாமல் கொடுத்தான். அரசன் அப்பழத்தை வாங்கி கொண்டு, “”நீ ஒரு வருடமாக கஷ்டப்பட்டு வளர்த்தவன். அதனால் இந்தப் பழத்தை நீ சாப்பிடு!” என்று கூறினான். காவலன் பழத்தைச் சாப்பிட்ட உடனே இறந்துவிட்டான். அதை கண்ட அரசன் அதிர்ச்சியடைந்தான். இதற்கு காரணமான கிளியை அடித்துக் கொன்றான். அந்த மரத்தின் பழத்தை யாரும் சாப்பிடக் கூடாது என கட்டளையிட்டான்.


ஒரு நாள்—


     வயதான நோயினால் தள்ளாடிய கிழவன் ஒருவன், தன் பிள்ளைகள் தன்னை பார்க்கவில்லையே என்ற வேதனையில் நாம் இருந்து என்ன பயன் என்று நினைத்தான். எனவே, இந்த விஷப் பழத்தை சாப்பிட்டு செத்துடலாம் என நினைத்து அந்த மரத்தில் ஏறி அங்கிருந்த பழத்தை பறித்து சாப்பிட்டான். அவ்ளோதான் அவனது வயோதிகத் தோற்றம் மாறி அழகிய இளைஞனானான். இந்தச் செய்தி அரசனின் காதுக்குச் சென்றது. ஆச்சர்யமடைந்த அரசன் அப்பழத்தை தின்றான். அவனும் நோய் நீங்கி இளைஞனானான். அவசரப்பட்டு கிளியை கொன்றதை எண்ணி வருந்தினான்.

by parthi   on 09 Mar 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
18-Oct-2016 15:43:30 Subhashhini said : Report Abuse
Good stories with valuable & moral messages.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.